என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சையில், 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் தா.பாண்டியன், பழ.நெடுமாறன் பங்கேற்பு
தஞ்சாவூர்:
அனைத்துக்கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் அருணாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அயனாபுரம் முருகேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை ரெயில் நிலையம் முன்பு வருகிற 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பால கிருஷ்ணன், தமிழர் தேசிய முன்னணி மாநில தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தில் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் பிரச்சினைக்காக போராடும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். இது கண்டனத்துக்கு உரியது.
தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தும் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காவல் துறை உடனே கைவிட வேண்டும். தமிழகத்தில் இயற்கை வளத்தை அழித்து மக்களை பாதிக்க வைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு துணை போகிற திட்டங்களை அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்