search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி தே.மு.தி.க.வினர் பால்குடம் எடுத்து ஊர்வலம்
    X

    விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி தே.மு.தி.க.வினர் பால்குடம் எடுத்து ஊர்வலம்

    தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரி அம்மன் கோவிலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலம்பெற வேண்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    உப்புக்கோட்டை:

    தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரி அம்மன் கோவிலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலம்பெற வேண்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முல்லைப்பெரியாறு அருகே உள்ள கன்னீஸ்வரமுடையார் கோவிலில் இருந்து தொண்டர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கவுமாரி அம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து விஜயகாந்த் நலம்பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    இதில், மாவட்ட துணை செயலாளர் ராஜேஸ்வரி வனராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிராஜ், தேனி ஒன்றிய செயலாளர் சீனிவாசன், தேனி நகர செயலாளர் முருகராஜா, வீரபாண்டி பேரூர் கழக செயலாளர் நாகராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×