என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னிமலை வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய 6 பேர் கைது
சென்னிமலை:
சென்னிமலை அருகே வாய்ப்பாடி கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்குள் மர்ம நபர்கள் சுற்றி கொண்டிருப்பதாக ஈரோடு மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜி விஸ்வநாத்துக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் ஈரோடு வனச்சரக அதிகாரி ரவீந்திரநாத் தலைமையில் வனவர் சரவணன், வன காப்பாளர்கள் தேவராஜ் மற்றும் கோபால் ஆகியோர் சென்னிமலை அருகே வாய்ப்பாடி வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதிக்குள் மர்ம நபர்கள் 6 பேர் சுற்றி கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது அவர்கள் அனைவரும் திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளர்கள் தங்கையா (வயது 33), பாலசுப்பிரமணி (27), கோபாலகிருஷ்ணன் (30), ரங்கராஜன் (33) மற்றும் ராஜா (30) என்றும், இவர்கள் அனைவரும் நேற்று விடுமுறை தினம் ஆதலால் முயல்கள் பிடிக்க வந்ததாகவும் வனத்துறையினரிடம் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் 6 பேருக்கும் தலா ரூ.4 ஆயிரம் என மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் அபராதத்தை வனத்துறை அதிகாரிகள் விதித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்