search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே நில விவகாரத்தில் மோதல் - 4 வாலிபர்கள் கைது
    X

    சங்கரன்கோவில் அருகே நில விவகாரத்தில் மோதல் - 4 வாலிபர்கள் கைது

    சங்கரன்கோவில் அருகே நில தகராறு மோதலில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள குவளைக்கண்ணியை சேர்ந்தவர் பொய்யாழி (வயது 48). இவருக்கு சொந்தமான பூர்விக இடம் அங்கு உள்ளது. அதே ஊரை சேர்ந்த இவரது உறவினர் பழனிவேல்ராஜ். இவர்கள் இருவருக்கும் இடையே இந்த பூர்வீக இடம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தனது வயலுக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்த பொய்யாழியை வழிமறித்த பழனிவேல்ராஜ், கருப்பசாமி (18), ஸ்ரீ, நாகராஜ் (20) ஆகியோர் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றவே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பொய்யாழிக்கு ஆதரவாக அழகர், பெருமாள் (21), முத்து, குட்டி ஆகியோர் வந்துள்ளனர்.

    இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் பொய்யாழி மற்றும் பழனிவேல்ராஜ் ஆகியோர் காயமடைந்தனர். இது பற்றி இரு தரப்பினரும் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார், கருப்பசாமி, நாகராஜ், பெருமாள், குட்டி ஆகிய 4 பேரை கைது செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×