search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் பழக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
    X

    கும்பகோணத்தில் பழக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

    கும்பகோணத்தில் பழக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், மாதுளம் பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 45). இவர் கும்பேஸ்வரன் கோவில் வாசல் முன்பு பழக்கடை வைத்துள்ளார்.

    நேற்று அரவிந்தன் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் இன்று காலை கடையை அரவிந்தன் திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அரவிந்தன் கடைக்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையின் கள்ளாபெட்டி திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அரவிந்தன் கும்பகோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி கேமராவை சோதனை செய்தனர். அப்போது கேமராவை மேல்புறமாக திருப்பி வைத்ததும், கடையில் உள்ளே இருந்த கம்யூடரின் கார்ட் டிஸ்கை கொள்ளையர்கள் எடுத்து சென்றதும் தெரியவந்தது.

    பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×