search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு - 3 பேர் கைது
    X

    காஞ்சீபுரம் அருகே வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு - 3 பேர் கைது

    காஞ்சீபுரம் அருகே வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த பெருநகர் அருகே தனியார் நிறுவன ஊழியர் ஸ்ரீதர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது 3 வாலிபர்கள் அவரை வழி மறித்து தாக்கி செல்போனை பறித்தனர்.

    இது பற்றி அவர் கிராம மக்களிடம் தெரிவித்தார். திரண்டு வந்தபொதுமக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களை பெருநகர் போலீசில் ஒப்படைத்தனர். 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×