search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியாறு அணை நீர்மட்டம் உயராததால் விவசாயிகள் ஏமாற்றம்
    X

    பெரியாறு அணை நீர்மட்டம் உயராததால் விவசாயிகள் ஏமாற்றம்

    மழை பெய்தும் பெரியாறு அணை நீர்மட்டம் உயராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை ஏமாற்றியதால் ஒருபோக நெல்சாகுபடி மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டு கோடை மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 128 அடி வரை உயர்ந்தது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால் சாரல் மழையே பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ளது. ஆனால் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் 125 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 876 கன அடி நீர் வருகிறது. 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 49.38 அடியாக உள்ளது. 1031 கன அடி நீர் வருகிறது. பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 960 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 3.8, தேக்கடி 1.6, மஞ்சளாறு 1, வைகை அணை 2, சோத்துப்பாறை 1 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×