என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மயிலாடுதுறை அம்மன் கோவில் உண்டியல் உடைத்து திருட முயற்சி
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகரில் 2-வது புதுத்தெருவில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை கோவில் பகுதியில் இருந்து ஏதோ உடைக்கப்படும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் எழுந்து வந்து பார்த்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி வேகமாக தப்பி சென்றனர்.
பின்னர் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்த போது வாசலில் இருந்த இரும்பு உண்டியலின் பூட்டை அந்த 2 மர்ம நபர்கள் உடைத்து திருட முயற்சித்தது தெரியவந்தது.
உடனடியாக இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மயிலாடுதுறை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அதில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று உண்டியலை உடைத்து திருட முயற்சிப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 8-ந் தேதியும் இதேபோல் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருட முயற்சித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் இதே கோவிலில் கடந்த 2 முறை உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலின் அருகில் தரங்கம்பாடிக்கு செல்லும் ரெயில்வே வழித்தடம் உள்ளது. இதில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அமர்ந்து பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மயிலாடுதுறை போலீசார் இரவு நேரங்களில் இப்பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்