என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்தவர் கைது
Byமாலை மலர்20 Jun 2018 9:19 AM GMT (Updated: 20 Jun 2018 9:19 AM GMT)
திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் தங்கம். இவர் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சீட்டு போட்டிருந்தனர்.
இந்த நிலையில் சீட்டு பணத்துடன் அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார். அவரிடம் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் இது குறித்து திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் செய்தனர். அவர் இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தர விட்டார்.
இதையடுத்து திருச்சி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான தங்கத்தை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அவர் திருச்சி உறையூருக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X