search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்தவர் கைது
    X

    திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்தவர் கைது

    திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் தங்கம். இவர் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சீட்டு போட்டிருந்தனர்.

    இந்த நிலையில் சீட்டு பணத்துடன் அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார். அவரிடம் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் இது குறித்து திருச்சி போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜிடம் புகார் செய்தனர். அவர் இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தர விட்டார்.

    இதையடுத்து திருச்சி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான தங்கத்தை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அவர் திருச்சி உறையூருக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×