என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பவானி அருகே மாநில கபடி வீரர் உள்பட 2 பேர் விபத்தில் பலி
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கோனேரிபட்டி பிரிவு குதிரைக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ரமேஷ். டிப்ளமோ முடித்துள்ளார்.
கபடி வீரரான இவர் மாநில அளவில் நடந்த பல்வேறு போட்டியில் விளையாடி உள்ளார். சிறந்த கபடி வீரர். இவரது நண்பர் பவானி அடுத்த ஊஞ்சப்பாளயத்தை சேர்ந்த அழகேசன். இன்று காலை 7.45 மணியளவில் அழகேசன் மோட்டார் சைக்கிளில் இருவரும் ஒரு வேலை விஷயமாக சென்று கொண்டிருந்தனர்.
பவானி அடுத்த கேசரி மங்கலம் பிரிவில் சென்ற போது முன்னாள் சென்ற ஒருவாகனத்தை முந்த முயன்றனர். அப்போது எதிரேவந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பவானி அரசுஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்