search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி பலி
    X

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி பலி

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி பலியானார். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஆதிவராக நல்லூர் பகுதியை சேர்ந்தவர் கனகயா (வயது 66). இவர் ஸ்ரீமுஷ்ணம்- ஆதிவராக நல்லூர் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கனகயா மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக் காக விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலன் அளிக்கமால் கனகயா நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×