என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிக்க தொடர்ந்து முயற்சி- அமைச்சர் சி.வி.சண்முகம்
Byமாலை மலர்15 Jun 2018 6:33 AM GMT (Updated: 15 Jun 2018 6:34 AM GMT)
தமிழக அரசு ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிப்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். #RajivMurderCase #TNMinister #CVeShanmugam
சென்னை:
ராஜீவ் கொலையாளிகளான முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் நீண்ட நாட்களாக ஜெயில் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இதனால் இவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது மகனின் விடுதலைக்காக போராடி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் 7 பேரின் விடுதலையும் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் மத்திய அரசு விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக 2 நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.
இந்தநிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சென்னையில் இன்று இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
ராஜீவ் கொலையாளிகள் விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் தமிழக அரசு அவர்களை விடுவிப்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அதுபற்றி உரிய விளக்கத்தை அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.#RajivMurderCase #TNMinister #CVeShanmugam
ராஜீவ் கொலையாளிகளான முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் நீண்ட நாட்களாக ஜெயில் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இதனால் இவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது மகனின் விடுதலைக்காக போராடி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் 7 பேரின் விடுதலையும் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் மத்திய அரசு விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக 2 நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.
இது தொடர்பாக மத்திய உள்துறை, தமிழக அரசிடம் தகவல்களையும் கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்று ஜனாதிபதி மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன. இது 7 பேரின் விடுதலை விவகாரத்தில் புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ராஜீவ் கொலையாளிகள் விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் தமிழக அரசு அவர்களை விடுவிப்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அதுபற்றி உரிய விளக்கத்தை அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.#RajivMurderCase #TNMinister #CVeShanmugam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X