search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்று காலை 2700 கனஅடியாக அதிகரித்தது.

    ஒகேனக்கல்:

    கர்நாடக-தமிழக எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சசெட்டி, உலுக்கானபள்ளி, நட்டாறம் பாளையம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3200 கனஅடியாக இருந்தது. 

    நேற்று காலை நீர்வரத்து 2500 கனஅடியாக குறைந்தது. நேற்று மாலை மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்று காலை 2700 கனஅடியாக அதிகரித்தது.

    Next Story
    ×