என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூரில் சம்பளம் வழங்கக்கோரி துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல்
Byமாலை மலர்3 May 2018 5:35 PM GMT (Updated: 3 May 2018 5:35 PM GMT)
கடலூர் நகராட்சியில் துப்புரவு ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக நகராட்சி சார்பில் சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் நகராட்சியில் துப்புரவு ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக நகராட்சி சார்பில் சம்பளம் வழங்கவில்லை. மேலும் இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சம்மேளனம் சார்பாக ஊதியம் கேட்டு மனு அளித்தனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுநாள் வரை சம்பளம் வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள் இன்று வேலையை புறக்கணித்தனர்.
அவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் எதிரே ஒன்று திரண்டனர். பின்னர் பாரதி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் நகராட்சியில் துப்புரவு ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக நகராட்சி சார்பில் சம்பளம் வழங்கவில்லை. மேலும் இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சம்மேளனம் சார்பாக ஊதியம் கேட்டு மனு அளித்தனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுநாள் வரை சம்பளம் வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள் இன்று வேலையை புறக்கணித்தனர்.
அவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் எதிரே ஒன்று திரண்டனர். பின்னர் பாரதி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X