search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அரசு இயக்குனர் மீது பெண் ஊழியர்கள் செக்ஸ் புகார்- ஆடியோ ஆதாரம் வெளியானது
    X

    புதுவை அரசு இயக்குனர் மீது பெண் ஊழியர்கள் செக்ஸ் புகார்- ஆடியோ ஆதாரம் வெளியானது

    புதுவையில் அரசு இயக்குனர் மீதான செக்ஸ் புகார் தொடர்பாக 27 பெண் ஊழியர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். 2 பெண் ஊழியர்களிடம் அந்த இயக்குனர் தவறான நோக்கத்தோடு பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக கவர்னர் கிரண்பேடிக்கு புகார் வந்தது.

    இதையடுத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டருக்கு அவர் உத்தர விட்டார்.

    அதன்படி புதுவை குழந்தைகள் பாதுகாப்பு நல கமிட்டி தலைவர் டாக்டர் வித்யா ராம்குமார் தலைமையில் தனி விசாரணை அமைப்பு அமைக்கப்பட்டது. அவர்கள் இது சம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் பல்வேறு அரசு துறைகளில் இருந்தும், தனியார் நிறுவனங்களில் இருந்தும் ஊழியர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக டாக்டர் வித்யா ராம் குமாரிடம் புகார் கொடுத்தார்கள்.

    அதில், புதுவையில் அரசு துறையின் இயக்குனர் மட்டத்தில் உள்ள 3 அதிகாரிகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இவ்வாறு பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் ஊழியர்கள் புகார் கூறி இருந்தார்கள்.

    அதில், ஒரு துறையின் இயக்குனருக்கு எதிரான புகார் தொடர்பாக, அந்த அலுவலகத்தில் பணியாற்றும் 27 பெண்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல்ஆசைக்கு இணங்காவிட்டால் வேறு ஊருக்கு மாற்றம் செய்வேன் என மிரட்டுவதாகவும், மேலும் பல்வேறு தொல்லைகள் கொடுப்பதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

    இதையடுத்து அந்த இயக்குனரை நேற்று காலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி டாக்டர் வித்யா ராம்குமார் சம்மன் அனுப்பி இருந்தார். ஆனால், அந்த இயக்குனர் வித்யா ராம்குமார் முன்பு ஆஜர் ஆகவில்லை.

    இதற்கிடையே வித்யா ராம்குமார் தலைமையிலான குழு தன்னை விசாரிக்க கூடாது என சென்னை ஐகோர்ட்டில் தடை பெற்றார். இதனால் கோர்ட்டு தடையை அகற்றி விட்டு விசாரணை நடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இதற்கிடையே 2 பெண் ஊழியர்களிடம் அந்த இயக்குனர் தவறான நோக்கத்தோடு பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. இயக்குனர் பேசுவதை பெண் ஊழியர்கள் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

    முதல் பெண் ஊழியரிடம் அதிகாரி பேசும் உரையாடல் விவரம் வருமாறு:-

    அதிகாரி:- ஹலோ.

    பெண்:- ஹலோ சார்.

    அதிகாரி:- என்னம்மா.

    பெண்:- ஹலோ. குட் ஆப்டர் நூன் சார்.

    பெண்:- சார் குவார்ட்ர்ஸ்ல பாம்பு வந்திடுச்சு சார்.

    அதிகாரி:- ஏன் வந்திச்சு? என்ன பாம்பு?

    பெண்:- பிரவுன் கலர்ல் இருந்துச்சு. மேல திட்டு திட்டா ரவுண்டா இருந்துச்சு.

    பெண்:- இப்பதான் சார்.

    பெண்:- வெளியே சுவர் ஓரமா வந்திட்டு போயிடுச்சு.

    அதிகாரி:- வீட்டு பக்கத்துல பாம்பு வரத்தான் செய்யும்.

    பெண்:- என்னை எப்ப சார் டிரான்ஸ்பர் செய்வீங்க?

    பெண்:- சார் இங்க ஆம்பளைங்களே இருக்க பயப்படுறாங்க, என்னை, ஒரு பெண்ணை இங்கு வந்து போட்டுட்டீங்க.

    பெண்:- எல்லாரும் சாப்பிட போயிட்டாங்க.

    அதிகாரி:- என்னம்மா நீ. அங்க நீ எப்படி வந்த? என்ன லட்சணமா வந்த?

    அதிகாரி:- நான் சீக்கிரம் ரெடி பண்றேம்மா.

    பெண்:- சரி சார்.

    அதிகாரி:- என்ன சோர்வா பேசுறே.

    பெண்:- பாம்பை பார்த்ததில் இருந்து பயமா இருக்கு சார்.

    அதிகாரி:- நான் எவ்வளவோ பாம்பை பார்த்திருக்கேன். என் கால் மேல கூட பாம்பு ஏறி போயிருக்கு.

    பெண்:- பாம்ப பார்த் துட்டு சும்மா இருக்க முடியுமா சார். இந்த இடத்துல ஒரு ஜென்சை (ஆண்) போடலாம்ல சார்.

    அதிகாரி:- நான் அடுத்த வாரம் அங்க வர்றம்மா.

    பெண்:- என்ன சார் பாம்பை பிடிக்கிறதுக்கா வர்றீங்க.

    அதிகாரி:- பாம்பையும் பிடிக்கிறேன். உன்னையும் பிடிக்கிறேன்.

    பெண்:- என்னை எல்லாம் பிடிக்க முடியாது சார்.

    அதிகாரி:- தைரியமா இரு. அங்க காவலுக்கு ஆள் போட செய்யுறேன். அப்புறம் பேசுறேம்மா.

    இவ்வாறு பேசி விட்டு போனை துண்டித்தார்.

    2-வது பெண் ஊழியரிடம் நடந்த உரையாடல் விவரம் வருமாறு:-

    பெண்:- ஹலோ... குட் மார்னிங் சார்.

    அதிகாரி:- ......... மவளே (கெட்ட வார்த்தை) நான் எப்ப பேசச் சொன்னேன். நீ எப்ப பேசுறே?

    பெண்:- மவுனம்.

    அதிகாரி:- இப்ப மணி என்ன ஆவுது?

    பெண்:- 3.10.

    அதிகாரி:- அய்யோ நேர மாயிட்டு. நான் தூங்கணும். 4 மணிக்கு எழுந்து போகணும். வேறு என்னம்மா செய்தி?

    பெண்:- ஆத்மா திட்டத்தில் இருந்து கூப்பிட்டாங்க.

    அதிகாரி:- சரி, நல்லா செய்யும்மா.

    பெண்:- எனக்கு மலையாளம் வராது சார்.

    அதிகாரி:- ஏம்மா. நான்லாம் ஒரு மாதத்துலே மலையாளம் கத்துக்கிட்டு மைக்ல பேசினேன்.

    பெண்:- மலையாளத்துல எப்படி சார் பேச முடியும்?

    அதிகாரி:- சரி, சரி. ஏம்மா நீ சாப்பிட்டியா?

    பெண்:- சாப்பிட்டாச்சு சார்.

    பெண்:- பொங்கல் செய்து சாப்பிட்டேன்.

    அதிகாரி:- சரி, என்ன மறக்க மாட்டியே.

    பெண்:- எப்போதும் மறக்க மாட்டேன் சார்.

    அதிகாரி:- என்ன மறந்ததாலதான் நீ கஷ்டப்படுகிறாய்? அப்புறமா 4 மணிக்கு பேசும்மா. நான் ஏற்பாடு செய்யிறேன்.

    இவ்வாறு இந்த உரையாடல் இருந்தது.

    இதேபோல் புகார் கொடுத்த பெண்களில் பலரும் வீடியோ ஆதாரங்களை விசாரணை குழுவிடம் கொடுத்துள்ளனர். அந்த ஆதாரங்களும் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews

    Next Story
    ×