என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாமல்லபுரத்தில் 11-ந்தேதி ராணுவ கண்காட்சியை மோடி தொடங்கி வைக்கிறார்
Byமாலை மலர்27 March 2018 8:00 AM GMT (Updated: 27 March 2018 8:00 AM GMT)
மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 11-ந்தேதி நடைபெற உள்ள ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி அடுத்த மாதம் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 280 ஏக்கர் நிலப்பரப்பில் கண்காட்சி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கு பெறுகிறார்கள்.
பிரதமர் மோடி வருகையையொட்டி கண்காட்சி நடைபெறும் இடம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக விழா மேடை அருகே ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் 3 நவீன ஹெலிகாப்டர் தளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
தொடக்க விழா நடைபெற உள்ள இடத்தில் கடலில் கப்பல் சாகசம் செய்யும் போது கரையில் இருந்து பொதுமக்கள் பார்க்கவும் வசதி செய்யப்பட்டு வருகிறது.
கண்காட்சி தொடங்குவதையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விடுதிகளுக்கு வரும் நபர்களின் முழு விவரம் மற்றும் முகவரியை கேட்டு பெற வேண்டும் எனவும் விடுதியில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி அடுத்த மாதம் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 280 ஏக்கர் நிலப்பரப்பில் கண்காட்சி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கு பெறுகிறார்கள்.
பிரதமர் மோடி வருகையையொட்டி கண்காட்சி நடைபெறும் இடம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக விழா மேடை அருகே ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் 3 நவீன ஹெலிகாப்டர் தளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
தொடக்க விழா நடைபெற உள்ள இடத்தில் கடலில் கப்பல் சாகசம் செய்யும் போது கரையில் இருந்து பொதுமக்கள் பார்க்கவும் வசதி செய்யப்பட்டு வருகிறது.
கண்காட்சி தொடங்குவதையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விடுதிகளுக்கு வரும் நபர்களின் முழு விவரம் மற்றும் முகவரியை கேட்டு பெற வேண்டும் எனவும் விடுதியில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X