search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மீண்டும் சேர்ப்பு
    X

    கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மீண்டும் சேர்ப்பு

    தவறை உணர்ந்ததால் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த எம்.ஜி. தென்னரசு, வடசென்னை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த டி.எல்.ரவி, தென் சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த எம்.ரவிச்சந்திரன், க.வில்வகுமார், கோவை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த க.சிங்கார வேல், தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த கண்ணார்குடி என்.எஸ். மதி ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி தங்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டதால், இன்று முதல் உறுப்பினர்களாகக் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×