என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற கைத்தறி தொழிலாளர்கள் 102 பேர் கைது
Byமாலை மலர்28 Nov 2017 3:54 PM GMT (Updated: 28 Nov 2017 3:54 PM GMT)
கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற கைத்தறி தொழிலாளர்கள் 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
இலவச துணிகளை வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டு உள்ளூர் கைத்தறி, சட்டத்தறி மூலம் நெசவு செய்து வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும். பாவுநூல் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை வட்டார கைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் செஞ்சி சாலை மீன் மார்க்கெட் அருகில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலத்துக்கு சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் அபிஷேகம், செயலாளர் சேதுசெல்வம், துணைத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சட்டமன்றத்தை நோக்கி வந்தது. அவர்களை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அங்கு நெசவாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலவச துணிகளை வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டு உள்ளூர் கைத்தறி, சட்டத்தறி மூலம் நெசவு செய்து வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும். பாவுநூல் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை வட்டார கைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் செஞ்சி சாலை மீன் மார்க்கெட் அருகில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலத்துக்கு சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் அபிஷேகம், செயலாளர் சேதுசெல்வம், துணைத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சட்டமன்றத்தை நோக்கி வந்தது. அவர்களை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அங்கு நெசவாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X