என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே திருமண ஆசை காட்டி மாணவி பலாத்காரம்: வாலிபர் கைது
தேனி:
ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகில் உள்ள கோவில்பாறையைச் சேர்ந்த மலைச்சாமி மகன் ஆனந்தன். (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவி (17) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவருடன் பழகி வந்துள்ளார்.
தேவி பிளஸ்-1 முடித்து பிளஸ்-2 செல்ல உள்ளார். மாணவியிடம் ஆசையாக பேசி தான் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆனந்தன் கூறியுள்ளார். மேலும் பல முறை உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த விபரம் தேவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் ஆனந்தனை கண்டித்தனர். மேலும் இனிமேல் தனது மகளை பார்க்க கூடாது என்று எச்சரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன் மாணவி தேவியை கூட்டிக் கொண்டு தலைமறைவானார்.
கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் தேவியின் பெற்றோர் புகார் அளித்தனர். தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் மீட்டனர். மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்து ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்