என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சாதத்திற்கு அருமையான மலபார் முட்டை கறி
Byமாலை மலர்3 July 2018 9:34 AM GMT (Updated: 3 July 2018 9:34 AM GMT)
தோசை, நாண், இட்லி, சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மலபார் முட்டை கறி. இன்று இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 6,
வெங்காயம் - 2,
இஞ்சி - சிறிய துண்டு,
தக்காளி - 2,
ப. மிளகாய் - 4,
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி,
மிளகாய் தூள், மல்லி தூள் - தலா 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி,
கரம் மசாலா - அரை தேக்கரண்டி,
முதல் தேங்காய் பால் - ஒரு கப்,
இரண்டாவது தேங்காய் பால் - ஒரு கப்,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
கடுகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி,
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு பாதியாக வெட்டி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டவும்.
அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி, மசாலா நன்கு வதங்கிய பின் இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.
கடைசியாக முதல் தேங்காய பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதி வர துவங்கியதும் இறக்கி பரிமாறவும்.
சுவையான மலபார் முட்டை கறி தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டை - 6,
வெங்காயம் - 2,
இஞ்சி - சிறிய துண்டு,
தக்காளி - 2,
ப. மிளகாய் - 4,
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி,
மிளகாய் தூள், மல்லி தூள் - தலா 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி,
கரம் மசாலா - அரை தேக்கரண்டி,
முதல் தேங்காய் பால் - ஒரு கப்,
இரண்டாவது தேங்காய் பால் - ஒரு கப்,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
கடுகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி,
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு பாதியாக வெட்டி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டவும்.
அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி, மசாலா நன்கு வதங்கிய பின் இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.
கடைசியாக முதல் தேங்காய பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதி வர துவங்கியதும் இறக்கி பரிமாறவும்.
சுவையான மலபார் முட்டை கறி தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X