என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இட்லிக்கு அருமையான தக்காளி கார சால்னா
Byமாலை மலர்13 April 2018 6:17 AM GMT (Updated: 13 April 2018 6:17 AM GMT)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கும் தொட்டுகொள்ள தக்காளி கார சால்னா அருமையாக இருக்கும். இன்று இந்த சால்னாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 1,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்,
கிராம்பு - 2,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
இஞ்சி - 1/4 இன்ச்,
பூண்டு - 5 பல்,
பட்டை - சிறிது,
சோம்பு - 1 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
கசகசா - 1 டீஸ்பூன்.
செய்முறை :
தக்காளி, வெங்காயம், சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், தனியா, பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, இஞ்சி, பூண்டு, ஏலக்காய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
பின்னர் அதே கடாயில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், தேங்காய்த்துருவல் போட்டு வதக்கவும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து குழம்பைக் கொதிக்க விடவேண்டும்
குழம்பு நன்றாக கொதித்து மசாலா வாடை போய் திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லியை தூவி இறக்கவும்.
இட்லி, பரோட்டாவுடன் சூடாக பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 1,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்,
கிராம்பு - 2,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
இஞ்சி - 1/4 இன்ச்,
பூண்டு - 5 பல்,
பட்டை - சிறிது,
சோம்பு - 1 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
கசகசா - 1 டீஸ்பூன்.
செய்முறை :
தக்காளி, வெங்காயம், சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், தனியா, பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, இஞ்சி, பூண்டு, ஏலக்காய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
பின்னர் அதே கடாயில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், தேங்காய்த்துருவல் போட்டு வதக்கவும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து குழம்பைக் கொதிக்க விடவேண்டும்
குழம்பு நன்றாக கொதித்து மசாலா வாடை போய் திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லியை தூவி இறக்கவும்.
இட்லி, பரோட்டாவுடன் சூடாக பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X