என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வீட்டிலேயே தக்காளி சாஸ் செய்வது எப்படி
Byமாலை மலர்10 Feb 2018 6:33 AM GMT (Updated: 10 Feb 2018 6:33 AM GMT)
கடைகளில் கிடைக்கும் தக்காளி சாஸ் சிலருக்கு பிடிக்காது. இன்று எளிய முறையில் வீட்டிலேயே தக்காளி சாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி - ஒரு கிலோ
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 3 பல்
பட்டை - சிறிதளவு
கிராம்பு - சிறிதளவு
எலுமிச்சைப்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
தக்காளியை நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நல்ல கெட்டியான தக்காளியாக (பெங்களூர் தக்காளி) வாங்கிக் கொள்ளவும். அப்போதுதான் சாஸ் கெட்டியாக நன்றாக இருக்கும்.
பூண்டு, இஞ்சியைத் தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் தக்காளி, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் போட்டு வேக விடவும்.
வெந்தவுடன் குக்கர் மூடியை திறந்து தக்காளியை ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும். இதை ஒரு பெரிய கண் உள்ள வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய தக்காளி விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீதமுள்ள சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து நன்றாகக் கிளறவும். சாஸை ஒரு தட்டில் சிறிது ஊற்றினால், அது ஒட்டாமல் கெட்டியாக இருக்க வேண்டும். அதாவது, நீர்க்க இருக்கக் கூடாது. இதுவே பதம், பிறகு அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி ஆறியவுடன் சுத்தமான பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும்.
இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். இதில் எந்த ஒரு பிரிசர்வேட்டிவ்வும் சேர்க்கவில்லை. இதனால் காய்ந்த ஸ்பூனை உபயோகப்படுத்தவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தக்காளி - ஒரு கிலோ
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 3 பல்
பட்டை - சிறிதளவு
கிராம்பு - சிறிதளவு
எலுமிச்சைப்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
தக்காளியை நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நல்ல கெட்டியான தக்காளியாக (பெங்களூர் தக்காளி) வாங்கிக் கொள்ளவும். அப்போதுதான் சாஸ் கெட்டியாக நன்றாக இருக்கும்.
பூண்டு, இஞ்சியைத் தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் தக்காளி, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் போட்டு வேக விடவும்.
வெந்தவுடன் குக்கர் மூடியை திறந்து தக்காளியை ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும். இதை ஒரு பெரிய கண் உள்ள வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய தக்காளி விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீதமுள்ள சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து நன்றாகக் கிளறவும். சாஸை ஒரு தட்டில் சிறிது ஊற்றினால், அது ஒட்டாமல் கெட்டியாக இருக்க வேண்டும். அதாவது, நீர்க்க இருக்கக் கூடாது. இதுவே பதம், பிறகு அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி ஆறியவுடன் சுத்தமான பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும்.
இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். இதில் எந்த ஒரு பிரிசர்வேட்டிவ்வும் சேர்க்கவில்லை. இதனால் காய்ந்த ஸ்பூனை உபயோகப்படுத்தவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X