search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த தினை ஆப்பம்
    X

    சத்து நிறைந்த தினை ஆப்பம்

    சிறு தானிய வகைகளில் ஒன்றான தினை ருசியுடன் கூடிய அருமருந்தாக செயல்படுகிறது. தினையை பயன்படுத்தி சுவையான ஆப்பம் செய்வது பற்றி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை - 2 கப்
    இட்லி அரிசி - கால் கப்
    வெள்ளை உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
    வெந்தயம் - 1 ஸ்பூன்
    தேங்காய்ப் பூ - 1 கப்
    வடித்த சாதம் - ஒரு கைப்பிடி
    உப்பு - தேவைக்கு
    சர்க்கரை - 2 ஸ்பூன்



    செய்முறை :

    முதலில் தினையுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் தேங்காய் மற்றும் வடித்த சாதம் சேர்த்து நைசாக அரைக்கவும்.

    அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலக்கி மாவை புளிக்க விடவும். மறுநாள் மாவு புளித்து நன்கு பொங்கியிருக்கும். மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தளர்வாக கலக்கவும்.

    ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் தேவையான மாவை ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்.

    ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.

    சத்தும், சுவையுமிக்க தினை ஆப்பம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×