என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கர்ப்பிணிகளுக்கான உபவிஷ்ட கோணாசனம் - முதல் நிலை
Byமாலை மலர்21 July 2018 5:04 AM GMT (Updated: 21 July 2018 5:04 AM GMT)
உப விஷ்ட கோணாசனம் என்றால் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்திருக்கும் நிலை என்று பொருள். கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை செய்து வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும்.
பெயர் விளக்கம்: உப விஷ்ட கோணாசனம் என்றால் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்திருக்கும் நிலை என்று பொருள்.
செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி உட்காரவும். அடுத்து கால்கள் இரண்டையும் முடிந்த அளவு நன்றாக அகற்றி வைக்கவும். தலைக்கு மேலே இரு கைகளையும் உயர்த்தி மூச்சை உள்ளே இழுத்து உடனே வெளியே விட்டபடி முழங்கால் களின் கீழ்பகுதியை கை விரல்களால் பிடிக்கவும்.
இந்த ஆசன நிலையில் இருப்பதற்கு சில கர்ப்பிணி களுக்கு சிரமமாக இருக்கலாம். அத்தகையவர்கள் தனக்கு முன்னால் ஒரு முக்காலியை வைத்து அதன்மேல் உள்ளங்கைகளை வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் முதுகு சற்று சாய்ந்த நிலையில் நேராக இருக்கட்டும். இது உபவின்ட கோணாசனத்தின் முதல் நிலையாகும். இந்த நிலையில் சாதாரண மூச்சுடன் 5 முதல் 1-0 நிமிடம் நிலைத்திருக்க வேண்டும்.
5 நிமிடம் கூட நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு இருக்கலாம். காலை, மதியம், மாலை வெறும் வயிற்றுடனோ அல்லது உணவு உண்டு 2 மணி நேரம் கழிந்த பிறகோ இந்த பயிற்சியை செய்யலாம்.
பயிற்சி குறிப்பு: ஒரு நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகபிரசவம் மிகவும் அனுகூலமாகும்.
தடைக்குறிப்பு: இந்த ஆசன நிலையில் இருந்து முன்னால் குனியக் கூடாது.
பயன்கள்: கூபக எலும்பு நன்கு விரிவடையும், இடுப்பு எலும்பு மற்றும் கால் நரம்புகள் வலுவடையும். சுகப்பிரசவம் ஏற்படும்.
செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி உட்காரவும். அடுத்து கால்கள் இரண்டையும் முடிந்த அளவு நன்றாக அகற்றி வைக்கவும். தலைக்கு மேலே இரு கைகளையும் உயர்த்தி மூச்சை உள்ளே இழுத்து உடனே வெளியே விட்டபடி முழங்கால் களின் கீழ்பகுதியை கை விரல்களால் பிடிக்கவும்.
இந்த ஆசன நிலையில் இருப்பதற்கு சில கர்ப்பிணி களுக்கு சிரமமாக இருக்கலாம். அத்தகையவர்கள் தனக்கு முன்னால் ஒரு முக்காலியை வைத்து அதன்மேல் உள்ளங்கைகளை வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் முதுகு சற்று சாய்ந்த நிலையில் நேராக இருக்கட்டும். இது உபவின்ட கோணாசனத்தின் முதல் நிலையாகும். இந்த நிலையில் சாதாரண மூச்சுடன் 5 முதல் 1-0 நிமிடம் நிலைத்திருக்க வேண்டும்.
5 நிமிடம் கூட நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு இருக்கலாம். காலை, மதியம், மாலை வெறும் வயிற்றுடனோ அல்லது உணவு உண்டு 2 மணி நேரம் கழிந்த பிறகோ இந்த பயிற்சியை செய்யலாம்.
பயிற்சி குறிப்பு: ஒரு நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகபிரசவம் மிகவும் அனுகூலமாகும்.
தடைக்குறிப்பு: இந்த ஆசன நிலையில் இருந்து முன்னால் குனியக் கூடாது.
பயன்கள்: கூபக எலும்பு நன்கு விரிவடையும், இடுப்பு எலும்பு மற்றும் கால் நரம்புகள் வலுவடையும். சுகப்பிரசவம் ஏற்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X