search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நந்தவனத்தில் ரெங்கமன்னாருடன் காட்சி தந்த ஆண்டாள்
    X

    நந்தவனத்தில் ரெங்கமன்னாருடன் காட்சி தந்த ஆண்டாள்

    சித்திரை மாதத்திற்கான பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ரெங்கமன்னாருடன் மேளதாளங்கள் முழங்க நந்தவனத்திற்கு ஆண்டாள் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
    ஒவ்வொரு மாதம் வரும் பூரம் நட்சத்திரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் தான் பிறந்த இடமான நந்தவனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். சிறப்பு பூஜையும் நடைபெறும். அதேபோல் சித்திரை மாதத்திற்கான பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ரெங்கமன்னாருடன் மேளதாளங்கள் முழங்க நந்தவனத்திற்கு ஆண்டாள் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

    பொதுவாக ஒவ்வொரு பூரத்திற்கும் ஆண்டாள் மட்டுமே கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க நந்தவனத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.

    ஆனால் தற்போது வசந்த உற்சவம் நடைபெற்று வருவதால் ஆண்டாள் சித்திரை பூர நட்சத்திரத்தை முன்னிட்டு ரெங்கமன்னாருடன் நந்தவனத்தில் எழுந்தருளினார். ரெங்கமன்னாருடன் நந்தவனத்தில் ஆண்டாள் காட்சியளித்ததை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நந்தவனத்தில் திரண்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×