search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண விழா
    X

    கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண விழா

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண விழா நடந்தது.
    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. நேற்று காலையில் கணபதிஹோமம், அபிஷேகம், வருஷாபிஷேக கும்பாபிஷேகம், மதியம் அலங்கார தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடந்தது.

    மாலையில் ரிஷப வாகனத்தில் சாமி எழுந்தருளி பெண் அழைப்புக்கு செல்லும் நிகழ்ச்சி, திருக்கல்யாணம் போன்றவை நடந்தன. இரவு ரிஷப வாகனத்தில் சாமியும் அம்பாளும் குதிரை வாகனத்தில் பெருமாளும், மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் முருகனும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர்.

    தொடர்ந்து, பள்ளியறை பூஜை, திருக்கல்யாண பொதுவிருந்து போன்றவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர் பேரவை தலைவர் கோபி தலைமையில் பக்தர்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×