search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விருத்தாசலம் அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    விருத்தாசலம் அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம்

    விருத்தாசலம் அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    விருத்தாசலத்தை அடுத்த ஆலடி அருகே உள்ள கொக்காம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.

    இதையொட்டி மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கொக்காம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் அப்பகுதியில் உள்ள குளக்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர். 
    Next Story
    ×