search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் இருந்து ராமர் வீதிஉலாவுக்கு புறப்பட்டபோது எடுத்த படம்.
    X
    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் இருந்து ராமர் வீதிஉலாவுக்கு புறப்பட்டபோது எடுத்த படம்.

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ராமர் வீதிஉலா

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ராமநவமியை முன்னிட்டு ராமர் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைண தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி உற்சவம் 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ராமநவமி உற்சவம் கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

    இதையொட்டி ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன், அனுமன் ஆகிய சாமிகளுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

    உற்சவத்தில் சிகர நிகழ்ச்சியான நேற்றுமுன்தினம் ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன், அனுமன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சாமி வீதிஉலா நடைபெற்றது. கோவில் ஸ்ரீராமர் வீதிஉலா ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    வருகிற 14-ந்தேதி வரை ராமநவமி உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×