என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் பங்குனி திருவிழா
Byமாலை மலர்23 March 2019 5:30 AM GMT (Updated: 23 March 2019 5:30 AM GMT)
முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்டசாமி பதி உள்ளது. இந்த பதியில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு திருப்பாற்கடலில் தீர்த்தமிடுதல் நடந்தது. தொடர்ந்து 5.30 மணிக்கு தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம் திருவிழா கொடியை ஏற்றினார்.
நிகழ்ச்சியில் தர்ம கர்த்தாக்கள் செல்வராஜன், மனோகர செல்வன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து பால் அன்னதர்மம், காலை 11.30 மணிக்கு முட்டப்பதி தீர்த்தம், 12 மணிக்கு உச்சிப்படிப்பு, அன்னதர்மம், இரவு 8 மணிக்கு அய்யா வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி பவனி வருதல் ஆகியவை நடந்தது. விழா நாட்களில் தினமும் அதிகாலை பணிவிடை, உகப்படிப்பு, பால் அன்னதர்மம், இரவு 8 மணிக்கு அய்யா வாகனத்தில் பவனி வருதல், அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.
29-ந் தேதி இரவு 7 மணிக்கு கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம், விவேகானந்தபுரம், சுவாமி நாதபுரம், வழியாக வலம் வந்து நள்ளிரவு 12 மணிக்கு முட்டப்பதியின் வடக்கே கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.
அடுத்த மாதம் 1-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் தர்ம கர்த்தாக்கள் செல்வராஜன், மனோகர செல்வன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து பால் அன்னதர்மம், காலை 11.30 மணிக்கு முட்டப்பதி தீர்த்தம், 12 மணிக்கு உச்சிப்படிப்பு, அன்னதர்மம், இரவு 8 மணிக்கு அய்யா வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி பவனி வருதல் ஆகியவை நடந்தது. விழா நாட்களில் தினமும் அதிகாலை பணிவிடை, உகப்படிப்பு, பால் அன்னதர்மம், இரவு 8 மணிக்கு அய்யா வாகனத்தில் பவனி வருதல், அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.
29-ந் தேதி இரவு 7 மணிக்கு கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம், விவேகானந்தபுரம், சுவாமி நாதபுரம், வழியாக வலம் வந்து நள்ளிரவு 12 மணிக்கு முட்டப்பதியின் வடக்கே கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.
அடுத்த மாதம் 1-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X