search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நாளை மறுநாள் தொடங்குகிறது
    X

    முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நாளை மறுநாள் தொடங்குகிறது

    குமாரவயலூர் பிரச்சித்தி பெற்ற முருகன் கோவிலில் நாளை மறுநாள் பங்குனி உத்திர திருவிழா தொடங்குகிறது.
    திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை அடுத்த குமாரவயலூரில் பிரச்சித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. முருகன் தன் வேலினால் சக்தி தீர்த்தத்தை உண்டாக்கி சிவபெருமானை வணங்கி வழிபட்ட தலமாகும். அருணகிரி நாதருக்கு காட்சி தந்து திருப்புகழ் பாட அருள் வழங்கிய பெருமை பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பங்குனி உத்திரவிழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திரவிழாவானது நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான வியாழக்கிழமை அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    காலை முதல் பக்தர்கள் பால்காவடி எடுத்து வருவார்கள். பின்னர் சுப்பிரமணியருக்கு பால் அபிஷேகம் நடைபெறும். இரவு 10 மணி அளவில் சிங்காரவேலர் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். 22-ந்தேதி உபய அபிஷேகமும், 23-ந்தேதி இரவு 8 மணிக்கு வள்ளி நாயகியின் தினைப்புனம் காத்தல் விழாவும் நடைபெறும்.

    24-ந்தேதி முருகப்பெருமான் வேலன், வேடன் விருத்தனாக வருதலும், அதன்பின் யானை விரட்டல் நிகழ்ச்சியும் நடைபெறும். 25-ந்தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பங்குனி உத்திரவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியான வள்ளி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
    Next Story
    ×