search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று தொடங்குகிறது

    நெல்லை அருகே செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் வயல்வெளிகளுக்கு இடையே செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையாக விளங்குகிறது.

    இக்கோவிலில் சிவபெருமான், தன்னுடைய நடன காட்சியை மகாவிஷ்ணு, அக்கினிபகவான், அகஸ்தியர், வாமதேவ ரிஷி, மணப்படை மன்னன் ஆகியோருக்கு அளித்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இன்று (வெள்ளிக்கிழமை) திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகமும், 5.30 மணிக்கு கோ பூஜையும், தொடர்ந்து ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியும் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனையும், 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலாவும், இரவு 7.30 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு அழகியகூத்தர் தாமிர சபைக்கு எழுந்தருளுகிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தக்கார் முருகானந்தம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    இதேபோல் நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரம் சொக்கநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும், சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை, திருவெம்பாவை பாராயணம், நடன தீபாராதனை ஆகியவை நடக்கிறது. 23-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகமும், 5.30 மணிக்கு கோ பூஜையும், காலை 7.30 மணிக்கு நடராஜர் திருவீதி உலாவும், 10.30 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. 
    Next Story
    ×