search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாராகி வழிபாட்டு பூஜை முறைகள்
    X

    வாராகி வழிபாட்டு பூஜை முறைகள்

    வாராகி வழிபாடு ஒரு மனிதனை நிகராற்ற ஞானியாக ஆற்ற கூடிய வழிபாடு, அந்த கால விதிகளை கடைபிடித்தால் மட்டுமே அன்னை நமக்கு நலம் அருள்வாள்.
    வாராகி வழிபாடு ஒரு மனிதனை நிகராற்ற ஞானியாக ஆற்ற கூடிய வழிபாடு, அந்த கால விதிகளை கடைபிடித்தால் மட்டுமே அன்னை நமக்கு நலம் அருள்வாள். வாராகி பற்றி ஒருசில பக்தர்கள் கோபநிலை, அதிகம் உக்ரம் பெருகுதல், ஏவல் தெய்வம் இப்படி எல்லாம் சொல்ல கேள்விபட்டு இருக்கிறேன். உண்மை என்னவென்றால் வாராகி அன்புக்கு குழந்தை. அவளுக்கு உரிய இலக்கணம் நம்மிடத்தில் இருந்தால் இவ்வுலகமில்லை. ஏழு லோகத்திலும் அவரை

    வாராகி ஏவல் தெய்வம் என்று பலர் கூறகேட்டேன். அது உண்மை இல்லை. ஏவல், பில்லி எனும் கெட்ட சக்திகளை அழிக்கவே அன்னை அவதாரம். ‘‘பெற்ற பிள்ளைக்கு இவ்வுலகில் கெடுதல் செய்யும் தாய் உண்டோ?’’, பூலோகம் காக்க அவதரித்த தாய் அதை அழிப்பாளா? அவள் அழிக்க பிறந்தது, அதர்மத்தை மகா சத்ருகளை ஏவல், ஏவி விடும் சத்ருகளை மட்டுமே. ஆக நீங்கள் அன்னையை கவலை இன்றி வழிபடலாம்.

    வாராகி வழிபாடு முறைகள் :

    1. வாராகி வழிபாடு வீட்டில் செய்ய ஒரு தனி இடம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
    2. எந்த இடத்தில், எந்த நேரத்தில் செய்கி றோமோ அதே இடத்தில் தான் தினசரி செய்ய வேண்டும்.
    3. வழிபாட்டிற்கு அன்னையின் படம், அல் லது விளக்கு ஜோதி வடிவாகவே வழிபாடு செய்யலாம், நாம் வடக்கு, மேற்கு நோக்கி அமரலாம்.
    4. காலை, மாலை குளிக்கின்றபோது தண்ணீரில் துளசி, வில்லம் ஒரு கைபிடி போட்டு குளிக்க வேண்டும்.
    5. பூஜை அறையில் அன்னை படத்தை வைப்பதை காட்டிலும் தனி அறையில் பூஜை செய்வதுதான் சிறப்பு.
    6. அன்னைக்கு அருகில் ஒரு விநாயகர் சிலை, அல்லது படத்தை வசதிக்கு ஏற்றார்போல் வைத்து கொள்வது நலம்.
    7. தினசரி பூஜை செய்யும் இடத்தில் பன்னீரில் மஞ்சள் தூள் கலந்து 5 ஏலக்காய் நுணுக்கி அதில் போட்டு அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.
    8. வெள்ளிக்கிழமை, பஞ்சமி தோறும் மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.
    9. பூஜை செய்யும் போது நீலம் மற்றும் சிகப்பு நிற ஆடையை பயன்படுத்துவது நலம்.
    10. தர்பை பாய், அல்லது கம்பளி போர்வை ஆசனத்திற்கு பயன்படுத்த நலம்.
    11. சுத்தமான மஞ்சள், குங்குமம் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.
    12. சாம்பிராணி புகையில், வெண்கடுகு, வெள்ளை குங்கிலியம் சேர்த்து போடுவது சிறப்பு.
    13. வாராகி அன்னை படம், விநாயகர் படம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்க வேண்டும்.



    பூஜை முறை :

    1. பூஜைக்கு தேவையான பொருட்கள், நைவேத்தியம் எல்லாம் சேகரித்து வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
    2. முதலில் குருவை- மானசீகமாக வழிபாடு செய்து “குருவடி சரணம் திருவடிசரணம்” என்று 9 முறை கூறவும்.
    3. பின்பு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு 21 முறை விநாயகாய நம என கூறி அர்ச்சிக்க வேண்டும்.
    4. விநாயகருக்கு தீபாராதனை காண்பித்து நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும்.
    5. வாராகி அன்னையை துளசி, வில்லம், நீலசங்கு பூ மூன்றையும் கலந்து “வாராகி மூல மந்திரம் மற்றும் “வாராகி மாலை” பாடி அர்ச்சனை செய்ய வேண்டும்.
    6. பூஜையில் அமர்ந்த பின் எழக் கூடாது.
    7. அர்ச்சனை முடித்த பிறகு அன்னைக்கு பிடித்த நைவேத்தியம் வைத்து தீபஆராதனை காண்பித்து வாராகி தேவி பாதம் பணிந்தேன் என கூறி பணிந்து கீழே விழுந்து வணங்க வேண்டும்.
    8. பஞ்சமி, அம்மாவாசை அன்று, ஒரு ஐந்து நபருக்கு உணவளித்தால் நலம்.
    9. கீழே விழுந்து வணங்கிய பிறகு, சங்கு நாதம் ஒலிக்க வேண்டும், அல்லது மணி இசைத்து மீண்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.
    10-. பின் நைவேத்தியம் பகிர்ந்து கொடுத்து நாமும் உண்ணலாம்.
    11. கண்டிப்பாக நேரம் தவறக்கூடாது, ஆரம்ப நாளில் எந்த நாளில் நேரத்தில் செய்தீர்களோ அதே நேரத்தில்தான் செய்ய வேண்டும்.
    12. ஒருவேளை வெளியூர் சென்றால் ஒரு அம்மன் ஆலயம் சென்று வழிபாடு செய்து மாற்றிக் கொள்ளலாம். இந்த எளிமையான வழி பாட்டை அனைவரும் செய்து அன்னையின் அருளை பெறலாம்.
    13. அன்னையின் கோடிக்கணக்கான மந்திரமும், இந்த வாராகி மாலை ஒன்றுக்கு சமம். ஆக இதே ‘பாமாலை’ சக்தி எண்ணிலடங்கா இது ஒன்றே பூஜைக்கு போதுமானது.

    Next Story
    ×