search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலதெய்வ கோவிலுக்கு பணம் அனுப்புங்கள்
    X

    குலதெய்வ கோவிலுக்கு பணம் அனுப்புங்கள்

    ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் குலதெய்வத்திற்கு பூஜை செய்வதற்குரிய பணத்தை அனுப்பி விடுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.
    நீங்கள் ஒருவேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால் முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை. உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒரு முறை கண்டிப்பாக சென்று வரவேண்டும். ஒரு வேளை உங்கள் குலதெய்வம் இருக்குமிடத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் வாழ்ந்து கொண்டிருந்தால் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதற்குரிய பணத்தை அனுப்பி விடுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

    கோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர் நட்சத்திரம், ராசிப்படி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள் (பல இடங்களில் இதை நடைமுறையாகவே வைத்திருக்கின்றார்கள்) நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை நேரில் சென்று பூஜை செய்து கொள்ள வேண்டும். குலதெய்வம் படத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களது மணிப்பர்சில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்ட பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.

    ஒருவருக்கு குலதெய்வம் பத்ரகாளி அம்மன் என வைத்துக் கொள்வோம். அவர் சென்னையில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் தனது குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சென்னையில் இருக்கும் வடிவுடை அம்மனுக்கோ, காளிகாம்பாளுக்கோ செய்து விட்டால் அது குலதெய்வத்தைப் போய்ச்சேராது. ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமான சித்தர்களின் ஜீவன் அமைந்திருப்பதால் இந்த நிலை. எனவே தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக்கடனை செலுத்திட வேண்டும்.
    Next Story
    ×