என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அரிஞ்சிகை ஈஸ்வரன் கோவிலில் சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
Byமாலை மலர்22 March 2018 3:22 AM GMT (Updated: 22 March 2018 3:22 AM GMT)
மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரன் கோவிலில் சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு தொடங்கியது. 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.
மேல்பாடி அருகே பொன்னை ஆற்றின் மேற்கு கரையில் பராந்தக சோழ மன்னரால் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சோமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. பராந்தக சோழனால் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருந்த இந்த கோவிலின் சில பணிகள் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜராஜசோழனால் முடிக்கப்பட்டது. ராஜராஜசோழனின் தாய்வழிப்பாட்டனார் அரூர் துஞ்சியதேவன் என்பவர் கி.பி.1014-ல் நடைபெற்ற ஒரு போரில் வீரமரணமடைந்தார். அவரின் நினைவாக சோமநாத ஈஸ்வரர் கோவிலின் எதிர்புறத்தில் அரிஞ்சிகை ஈஸ்வரன் கோவில் கட்டப்பட்டது.
பழமை வாய்ந்த இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஆண்டு தோறும் 2 முறை சூரிய ஒளி விழுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 முதல் 24-ந் தேதி வரையிலும், செப்டம்பர் 21 முதல் 24-ந் தேதி வரையிலும் சூரிய ஒளி இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழுகிறது.
இந்த ஆண்டு சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் அதிசய நிகழ்வு நேற்று காலை 6.32 மணி முதல் 6.50 வரை சூரிய ஒளி வாசல் வழியாக வந்து லிங்கத்தின் மீது விழுந்தது. பின்னர் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு 24-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது.
பழமை வாய்ந்த இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஆண்டு தோறும் 2 முறை சூரிய ஒளி விழுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 முதல் 24-ந் தேதி வரையிலும், செப்டம்பர் 21 முதல் 24-ந் தேதி வரையிலும் சூரிய ஒளி இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழுகிறது.
இந்த ஆண்டு சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் அதிசய நிகழ்வு நேற்று காலை 6.32 மணி முதல் 6.50 வரை சூரிய ஒளி வாசல் வழியாக வந்து லிங்கத்தின் மீது விழுந்தது. பின்னர் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு 24-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X