search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. அதிகாலை முதல் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    தகவல் மைய வளாகத்தில் காய்கனிகள் மற்றும் பல்வேறு மலர்களை கொண்டு யுகாதி கோலம் போடப்பட்டிருந்தது. இதனை பக்தர்கள் கண்டு ரசித்து சென்றனர்.

    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலிலும் யுகாதி பண்டிகையையொட்டி வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் வேலூரில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தெலுங்கு பேசும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் யுகாதி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
    Next Story
    ×