search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை நடக்கிறது
    X

    லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை நடக்கிறது

    லால்குடியில் பெருந்திரு பிராட்டியார் உடனுறை சப்தரிஷீஸ்வரர் கோவில் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    லால்குடியில் பெருந்திரு பிராட்டியார் உடனுறை சப்தரிஷீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி சுவாமி- அம்பாளுக்கு அன்று காலை 10 மணிக்கு பால், தேன், பன்னீர், பழங்கள் உள்பட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாலை 7 மணிக்கு நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி 4 வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிக்காக கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    இந்நிலையில் கடந்த 4-ந்தேதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, செயல் அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×