search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருட விரத வழிபாடு பலன்கள்
    X

    கருட விரத வழிபாடு பலன்கள்

    கருட பகவான் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார். இவரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
    * எதிரிகளை ஜெயிக்கலாம், வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

    * சர்வரோக நிவாரணம், பிணி பீடைகள் நிவர்த்தி.

    * பில்லி, சூன்யம், ஏவல் கண்திருஷ்டி தோஷம், செய்வினைக் குற்றம் போன்றன நிவர்த்தி ஆகுதல்.

    * ஜாதக கிரக தசாபுத்தி, கோச்சார கிரகங்களால் ஏற்படும்  கண்டாதி தோஷங்கள், விபத்து, ஆயுள் பயம் போன்றன நிவர்த்தி ஆகும்.

    * போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டுதல்.

    * நிலம், வீடு, மனைபோன்றவற்றில் லாபம் ஏற்படல்.

    * திருமண பாக்கியம் கைகூடுதல், புத்திரதோஷம் நீங்கி, புத்திரப்பேறு உண்டாகுதல்.

    * படிப்புகளில், கல்வி சம்பந்தமானவற்றில் தேர்ச்சி பெறுதல், வேலைவாய்ப்புக்கிடைத்தல்.

    * அவரவர் செய்யும் உத்தியோகம், தொழில், வர்த்தகம், வியாபாரத்தில் வெற்றியும், லாபமும் உண்டாகும்.

    * குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை, சௌக்கியம் உண்டாகும்.

    * கிடைக்க வேண்டிய சொத்துகள், காசு பணம், இழந்த பொருட்களை மீண்டும் பெறுதல் போன்றன கருட பகவான் அருளால் கிடைக்கும்.

    * நியாயமான எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள் நிறைவேறும்.

    * விஷ ஜந்துக்கள், சர்ப்ப வாக்குகளில் இருந்து சதா பாதுகாப்பு சக்தி கிடைக்கும்.

    * விஷம குணங்கள் கொண்ட கொடிய சத்ருக்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
    Next Story
    ×