search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எலந்தர், ஹலந்தர் சாகிப் தர்காவில் சந்தனம் பூசும் விழா இன்று நடக்கிறது
    X

    எலந்தர், ஹலந்தர் சாகிப் தர்காவில் சந்தனம் பூசும் விழா இன்று நடக்கிறது

    எலந்தர், ஹலந்தர் சாகிப் தர்காவில் இந்த ஆண்டுக்கான சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நடக்கிறது.
    காரைக்கால் மாவட்டம் நிரவியில் உள்ள எலந்தர், ஹலந்தர் சாகிப் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனம் பூசும் விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு சந்தனம் பூசும் விழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நடக்கிறது. இந்த விழா வருகிற 4-ந் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×