search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துன்பங்களை அகற்றும் கரிவரதராஜ பெருமாள்
    X

    துன்பங்களை அகற்றும் கரிவரதராஜ பெருமாள்

    சென்னை மாதவரத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைத் தரும் ஆலயமாக திகழ்கிறது.
    நம் நாட்டில் உள்ள பல ஆலயங்கள், வேதங்களோடும், புராணங்களோடும் தொடர்பு கொண்டு, புண்ணிய தலங்களாக திகழ்ந்து வருகின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளைக் கொண்டுள்ள தலமே ‘ஷேத்திரம்’ என அழைக்கப்படும். அந்த ஷேத்திரம், பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைத் தரும் மகத்தான ஆற்றல் கொண்டவை. அவற்றுள் ஒன்று சென்னையில் உள்ள மாதவரம். இங்குள்ளது கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில்.

    பெருமாளின் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன் என பெரியோர் சொல்வர். ஆனால் கனகவல்லிக்கு இரண்டு திருக்கண்களுமே சந்திரன். கனகவல்லி தாயார், கருணையே பார்வையாகக் கொண்டவள். தன் பதியான கரிவரதராஜன் பக்தர்களிடம் காட்டும் கருணையை செயலாக்குபவள் இவள் தான். வரப்பிரசாதியான இந்தத் தாயாரை பத்து நிமிடம் தரிசித்தால், பெற்ற தாயிடம் பேசுவது போன்ற உணர்வு ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

    துன்பத்தில் இருப்பவர்களை அரவணைத்து அருள்பாலிக்கும் இந்தப் பிராட்டி, திருமணத்தடையை நீக்குவதோடு, புத்திர பாக்கியமும் அருள்கிறாள். தொடர்ச்சியாக 12 வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் நீராஞ்சன தீபமேற்றி, மஞ்சள் மாலை சாற்றி வேண்டுவோருக்குத் திருமணம், குழந்தைப்பேறு வாய்க்கிறது. பேச்சுத்திறன் இல்லாத குழந்தைகளுக்குப் பேச்சுத்திறன் ஏற்படுத்தியும், காணாமல் போன குழந்தை திரும்ப கிடைக்கச்செய்தும் அதிசயம் நிகழ்த்தியுள்ளார். மனமுருகி வழிபடுவோருக்கு 21 நாளில் வேண்டுதல் நிறைவேறுகிறது.

    சென்னை பாரிமுனையில் இருந்து 17 கி.மீ., கோயம்பேட்டில் இருந்து 10 கி.மீ., பெரம்பூர் பஸ், ரெரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் மாதவரம் உள்ளது. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 
    Next Story
    ×