search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துன்பம், திருமணத்தடை நீங்க பரிகாரங்கள்
    X

    துன்பம், திருமணத்தடை நீங்க பரிகாரங்கள்

    துன்பம் வரும்போது, இறைவனை நாடிச் சென்று முறையிடுவோரின் எண்ணிக்கை ஏராளம். தடை, தாமதங்களுக்கு இங்கு எளிய பரிகாரம் தரப்பட்டுள்ளது.
    மனித வாழ்வு ஏற்றத்தாழ்வு நிறைந்தது. எல்லோரும் எப்போதுமே மகிழ்ச்சியாகவும் இருந்து விடுவதில்லை. துன்பத்தில் சிக்கி அல்லல்படுவதும் இல்லை. இன்பத்தையும், துன்பத்தையும் மாறி, மாறி அனுபவிப்பதே மனிதவாழ்வு. ஆனால் துன்பம் வரும்போது, இறைவனை நாடிச் சென்று முறையிடுவோரின் எண்ணிக்கை ஏராளம். தடை, தாமதங்களுக்கு இங்கு எளிய பரிகாரம் தரப்பட்டுள்ளது.

    துன்பங்கள் நீங்க..

    ஏதாவது ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பசுவுக்கு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்து வர வறுமை நீங்கும். செல்வ நிலை உயரும்.

    தொழில் விருத்தியாக..

    கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சைப் பழம் ஒன்று வாங்கி, கடை மற்றும் அலுவலகம் முழுவதும் சுற்றி விட்டு, வெளியில் நின்று நான்கு துண்டாக நறுக்கி, தெற்கு முகமாக நின்று குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும். இவ்வாறு செய்வதால், கடை மற்றும் அலுவலகத்தில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும். இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்வது நல்லது.

    திருமணத்தடை விலக..

    திருமணத்தடை இருப்பவர்கள், நல்லெண்ணெய் தேய்த்தும், கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்தும் குளிக்கவும். பின்னர் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும். வறுமை நீங்குவதற்கும், வேலைவாய்ப்பு கிடைக்கவும் கூட இதைச் செய்யலாம். ஆண்கள் சனிக்கிழமையும், பெண்கள் வெள்ளிக்கிழமையும் இந்த பரிகாரத்தைச் செய்யவும். 
    Next Story
    ×