என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அனைத்து விதமான கர்ம தோஷங்களுக்கான பரிகாரம்
Byமாலை மலர்24 Jan 2018 8:03 AM GMT (Updated: 24 Jan 2018 8:04 AM GMT)
குலதெய்வ சாபம் - பிதுர் தோஷம், சாபம் - பெண் சாபம் என 16 விதமான சாபங்களுக்கும் எளிய பரிகாரங்கள் உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகத்தில் பிறக்கக்கூடிய அனைத்து குழந்தைகளுமே ஏதேனும் கர்மவினைகளோடே பிறக்கிறது. நாக தோஷம் - களத்திர தோஷம் - மாங்கல்ய தோஷம் - செவ்வாய் தோஷம் - கேந்திராதிபத்திய தோஷம் என பல விதமான தோஷங்கள் இருக்கிறது. முன்னோர்கள் வழியில் ஏதேனும் சாபம் இருக்கலாம். உதாரணமாக குல தெய்வ சாபம் - பிதுர் தோஷம், சாபம் - பெண் சாபம் என 16 விதமான சாபங்கள் சொல்லப்படுகிறது.
இதன் மூலமாகவும் நாம் செய்யக்கூடிய - ஆரம்பிக்கக்கூடிய காரியங்களில் ஏதேனும் தடை தாமதம் ஏற்படலாம். இன்னும் சிலருக்கு ஒரு காரியம் முடிவடையும் என நினைக்கும் போது அந்த காரியமே முடியாமல் போகலாம்.
இதற்கான எளிமையான பரிகாரம் வீட்டில் காயத்ரி ஹோமம் செய்வது. 1008 ஆவர்த்தி காயத்ரி தேவிக்கு அன்னம் - நெய் வைத்து ஹோமம் செய்வதன் மூலம் சாபத்தின் கடுமையைக் குறைக்க முடியும்.
தினமும் வீட்டில் ஹோமம் செய்வதற்குப் பெயர் அக்னி ஹோத்திரம். இதில் ஏதேனும் ஒரு செப்புப் பாத்திரத்தில் வரட்டி வைத்து பச்சரிசி மற்றும் நெய்யைக் கொண்டு காயத்ரி மந்திரம் சொல்லி ஹோமம் செய்வார்கள். இப்படி தினமும் ஹோமம் செய்பவர்களுக்கு தோஷங்கள் அண்டாது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X