என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அதிதூதர் மிக்கேல் ஆலய குடும்ப விழா 21-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்19 Sep 2018 3:42 AM GMT (Updated: 19 Sep 2018 3:42 AM GMT)
நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தில் உள்ள அதிதூதர் மிக்கேல் ஆலய குடும்ப விழா வருகிற 21-ந்தேதி மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தில் அதிதூதர் மிக்கேல் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் குடும்ப விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருட விழா வருகிற 21-ந் தேதி மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் செபமாலை, திருப்பலி நடக்கிறது.
9-ம் திருவிழா அன்று காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து நடக்கிறது. குலசேகரன்புதூர் பங்குதந்தை ஜாண் அமலநாதன் தலைமை தாங்குகிறார். குருசடி பங்குதந்தை பிரான்சீஸ் எம்.போர்ஜியா மறையுரையாற்றுகிறார். இரவு 7 மணிக்கு நடைபெறும் மாலை ஆராதனைக்கு புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் சுவக்கின் தலைமை தாங்குகிறார். கோட்டார் மறைமாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.
10-ம் திருவிழாவன்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 8 மணிக்கு பெருவிழா திருப்பலி நடக்கிறது. அன்பியங்கள் மற்றும் குடும்ப நலப்பணிக்குழு இயக்குனர் வலோரியன் தலைமை தாங்குகிறார்.
மறை மாவட்ட ஆற்றுப்படுத்தும் பணி இயக்குனர் பிரான்சீஸ் சேவியர் நெல்சன் மறையுரையாற்றுகிறார். காலை 10.30 மணிக்கு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு மேய்ப்புபணிப் பேரவை, பங்குதந்தை ஜார்ஜ் வின்சென்ட் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதற்கு அருட்பணியாளர் மார்சலின் டி போரஸ் தலைமை தாங்குகிறார். ராஜாவூர் பங்குதந்தை ரால்ப் கிராண்ட் மதன் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் செபமாலை, திருப்பலி, அதிதூதர் மிக்கேல் புகழ்மாலை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. 3-ம் திருவிழாவன்று காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி தொடங்குகிறது. அருட்பணியாளர் ஆல்வின் ஜூடி தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஆரோக்கியம் மற்றும் அசிசி ஆஸ்ரம துறவிகள் மறையுரை, சிந்தனையாற்றுகின்றனர்.
9-ம் திருவிழா அன்று காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து நடக்கிறது. குலசேகரன்புதூர் பங்குதந்தை ஜாண் அமலநாதன் தலைமை தாங்குகிறார். குருசடி பங்குதந்தை பிரான்சீஸ் எம்.போர்ஜியா மறையுரையாற்றுகிறார். இரவு 7 மணிக்கு நடைபெறும் மாலை ஆராதனைக்கு புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் சுவக்கின் தலைமை தாங்குகிறார். கோட்டார் மறைமாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.
10-ம் திருவிழாவன்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 8 மணிக்கு பெருவிழா திருப்பலி நடக்கிறது. அன்பியங்கள் மற்றும் குடும்ப நலப்பணிக்குழு இயக்குனர் வலோரியன் தலைமை தாங்குகிறார்.
மறை மாவட்ட ஆற்றுப்படுத்தும் பணி இயக்குனர் பிரான்சீஸ் சேவியர் நெல்சன் மறையுரையாற்றுகிறார். காலை 10.30 மணிக்கு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு மேய்ப்புபணிப் பேரவை, பங்குதந்தை ஜார்ஜ் வின்சென்ட் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X