search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "st michael"

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 14-ந்தேதி ஆடம்பரத் தேர்ப்பவனி நடக்கிறது.

    ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று காலை 5.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருக்கொடி பவனியும், 6.15 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து திருக் கொடியேற்றமும், திருப்பலியும் நடக்கிறது. கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். இரவு 9 மணிக்கு அன்பிய ஆண்டுவிழா கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நவநாள் திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 10 மணிக்கு சிறப்பு ஜெப வழிபாடு நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரையும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் 8-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரையும் நடக்கிறது. விழாவில் தினமும் திருப்பலி, மறையுரை, ஜெபமாலை போன்றவை நடைபெறுகிறது.

    விழாவில் 12-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை திருப்பலி மறையுரை, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 13-ந் தேதி காலை 10 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, 11 மணிக்கு நவநாள் திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு ஆடம்பரத் தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் கடைசி நாளான 14-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு பெருவிழா திருப்பலியும், காலை 8.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், 10 மணிக்கு திருப்பலியும், பகல் 12 மணிக்கு ஆடம்பரத் தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேர்த் திருப்பலியும் நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டான்லி சகாயம், உதவி பங்குத்தந்தையர்கள் வில்சன், சாலமன், பங்கு பேரவைத் துணைத் தலைவர் அலெக்சாண்டர், செயலாளர் எம்.என்.ராஜபாலன், துணைச் செயலாளர் கலாமேரி, பொருளாளர் ஆன்றோ சசி, பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    • திருவாடானை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடைபெற்றது.
    • பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    திருவாடானை தாலுகா ஆண்டாவூரணியில் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் தினமும் நவநாள் திருப்பலியும், அருட் தந்தையர்களால் சிறப்பு மறையுறையும் நிகழ்த்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை அருட்தந்தை மரிய சிங்கராயர், ஆண்டாவூரணி பங்குத்தந்தை அந்தோணி மைக்கேல் ஆகியோர் தலைமையில் அருட் தந்தையர்கள் நிறைவேற்றினர்.

    தொடர்ந்து மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் தூய மிக்கேல் அதிதூதர், புனித சந்தியாகப்பர், இன்னாசியார், புனித சவேரியார், புனித சூசையப்பர், அன்னை மரியாள் ஆகியோர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக வந்து பொதுமக்களுக்கு இறை ஆசீர் வழங்கினர்.

    திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக் கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    • ஒவ்வொரு நாளும் ஜெபமாலை நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெறும்.
    • வருகிற 1-ந்தேதி கூட்டுத்திருப்பலி, மின்னொளி ரத தேர்பவனி நடைபெறுகிறது.

    நிலக்கோட்டை அருகே மிக்கேல்பாளையத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 23-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மதுரை உயர்மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை செபாஸ்டின் அல்வராஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பங்குத்தந்தை சேவியர் ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மாலையில் ஜெபமாலை நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி இரவு 7 மணிக்கு கூட்டுத்திருப்பலி, வாணவேடிக்கை, மின்னொளி ரத தேர்பவனி நடைபெறுகிறது. 2-ந்தேதி திருப்பலி, தேர்பவனி, நற்கருணை ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை புனித மிக்கேல் ஆலய நிர்வாக குழுவினர், அடைக்கல அன்னை அருட்சகோதரிகள், பங்கு அமைப்புகள், பங்கு இறைமக்கள் உள்பட பலர் செய்து வருகின்றனர்.

    • திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 30-ந்தேதி புனித தேவசகாயம் பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    திக்கணங்கோடு அருகே உள்ள மணலிக்குழிவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை 6.45 மணிக்கு கொடியேற்றம் ஆகியவை நடைபெறும். மாத்திரவிளை புனித ஆரோபன அன்னை ஆலய அருட்பணியாளர் ஜஸ்டின் பிரபு கொடியேற்றி வைக்கிறார். தொடர்ந்து திருப்பலி, அன்பிய ஒருங்கிணைய ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, கூட்டுத்திருப்பலி நடக்கிறது. 25-ந் தேதி காலை 9 மணிக்கு குழந்தைகளுக்கு முதல் திருவிருந்தும், திருமுழுக்கும் வழங்கப்படுகிறது. மாலையில் மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. வருகிற 30-ந்தேதி புனித தேவசகாயம் பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளான வருகிற 2-ந் தேதி காலை 9 மணிக்கு அழகியமண்டபம் அன்னை ஆதா பயிற்சி நிலைய இயக்குனர் அருட்பணியாளர் எஸ். கே .ஜோஸ் ராபின்சன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்கு அருள்பணியாளர் மரிய வின்சென்ட் தலைமையில் பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஓலக்கோடு ஜான், செயலாளர் தீபா, துணை செயலாளர் மிக்கேல் ராஜ், பொருளாளர் விஜிலா, பங்கு அருள்பணி பேரவையினர், பங்கு இறைமக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

    • 28-ந்தேதி இரவு மிக்கேல் அதிதூதர் தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது.
    • 29-ம்தேதி காலையில் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பிரசித்தி பெற்ற புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் காலையில் திருப்பலியுடன் தொடங்கியது. மாலையில் ஜெபமாலையை தொடர்ந்து கொடியை அருட்தந்தை ஜெபநாதன் அர்சித்து ஏற்றி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீர் போன்ற வழிபாடுகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் போன்ற வழிபாடுகள் நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி 9-ம் திருவிழாவன்று இரவு மிக்கேல் அதிதூதர் தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது.

    10-ம் திருவிழா அன்று காலையில் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.

    • 8-ம் திருவிழா அன்று நற்கருணை பவனி நடக்கிறது.
    • 10-ம் திருவிழா அன்று ஆடம்பர கூட்டுதிருப்பலி நடக்கிறது.

    தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றம் நடந்தது.

    விழாவில் பங்கு தந்தைகள் இருதயசாமி, வினித், மார்ட்டின், சத்திஸ்டன், உதவி பங்குதந்தைகள் பாக்கியராஜ், வின்சென்ட், பால்ரோமன், சவரிராஜ் மற்றும் அகஸ்டின், மரியஅரசு, விக்டர் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா நாட்களில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    விழாவில் 8-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது. 9-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட பிஷப் சூசை நசரேன் தலைமையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. 10-ம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் பெருவிழா ஆடம்பர கூட்டுதிருப்பலி நடக்கிறது.

    • விழா வருகிற 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • தினமும் பிரார்த்தனை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. விழாவிற்கு திண்டுக்கல் முதன்மை குரு சகாயராஜ் தலைமை தாங்கினார். அகரக்கட்டு பங்குத்தந்தை எட்வின்ராஜ், சுரண்டை பங்குதந்தை ஜோசப்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. விழா வருகிற 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    தினமும் பிரார்த்தனை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தையும், வட்டார அதிபருமான போஸ்கோ குணசீலன், உதவி பங்கு தந்தை அந்தோணி ராஜ் மற்றும் பங்கு பேரவையை சேர்ந்தவர்கள் செய்து வருகிறார்கள்.

    சேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
    சேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று முன்தினம் நடந்தது. அம்பை வட்டார அதிபர் சைமன் தலைமை தாங்கி கொடியேற்றினார். தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் மாலை திருப்பலியும், கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. வருகிற 24-ந் தேதி புனிதரின் சப்பரபவனியும், 25-ந் தேதி ஜூடு பால்ராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலியும், நற்கருணை பவனியும் நடக்கிறது.

    26-ந் தேதி திருவிழா திருப்பலி, தேர்பவனி, அசனவிருந்து போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ரெக்ஸ் ஜஸ்டீன் அடிகளார், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
    திட்டுவிளை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    திட்டுவிளை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. அருட்பணியாளர் செல்வன் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் திவ்வியன் மறையுரையாற்றினார்.

    இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8 மணிக்கு அன்பின் விருந்தும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு திருவிழா திருப்பலி அருட்பணியாளர் பென்சிகர் தலைமையில் நடக்கிறது. எட்மண்ட் மறையுரையாற்றுகிறார். மதியம் 1 மணிக்கு அலங்கார சப்பர பவனி நடக்கிறது.
    இராஜாவூர் தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தில் சிறப்புற்றுத் திகழும் தூய மிக்கேல் அதிதூதர் குருசடியில் பலவகை நோயாளிகள் தங்கள் பிணிகள் நீங்கி நலம் பெற நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கின்றனர்.
    முத்தமிழும் முக்கடலும் முத்தமிடும் குமரி மண்ணில் நாகர்கோவிலுக்கு கிழக்கே 15 கிலோ மீட்டர் தூரத்தில் சுசீந்திரம், தோவாளை ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது இராஜாவூர். கி.பி. 1542-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடி வந்திறங்கி 1545 வரை கிழக்குக் கடற்கரை, குமரிக் கடற்கரை மற்றும் திருவிதாங்கூர் கடற்கரைப் பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திகளைப் போதித்து கிறிஸ்தவ மறையை காலூன்றச் செய்த தூய பிரான்சிஸ் சவேரியாரால் மனந்திருப்பப்பட்ட கிறிஸ்தவர்களில் பலர் பல ஊர்களிலிருந்தும் பிழைப்புத் தேடி இராஜாவூருக்கு வந்து குடியேறியதாக வரலாறு உள்ளது.

    கி.பி. 18-ம் நூற்றாண்டு முதலே இராஜாவூர் இறைமக்கள் தூய மிக்கேல் அதிதூதருக்குச் சிறியதோர் ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்துள்ளனர். கி.பி. 1919-ம் ஆண்டு கொல்லம் ஆயர் மேதகு பென்சிகர் ஆண்டகை உதவியுடன் ஆலயம் பெரிதாகக் கட்டப்பட்டு, குருகுல முதன்மைதந்தையால் அர்ச்சிக்கப்பட்டது. 1926-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் நாள் இராஜாவூர் தனி பங்காகச் சிறப்பு பெற்றது.

    தற்போதைய அழகுறு ஆலயம் 8-12-1991 அன்று கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் தர்மராஜால் அடிக்கல் நாட்டப்பட்டு, ஜூபிலி ஆண்டு 2000-ம் மே மாதம் 6-ம் நாள் அர்ச்சிக்கப்பட்டுள்ளது. ஜூபிலி ஆண்டின் தொடக்கத்தில் கோட்டாறு ஆயர் லியோன் தர்மராஜ் கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள ஏழு திருத்தலங்களில் ஒன்றாக இராஜாவூரையும் அறிவித்துள்ளார்கள். இவற்றுள் தனிச்சிறப்புப் பெற்று விளங்குவது இராஜாவூர் தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலமே.

    இத்திருத்தலத்தில் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்டோருக்கு நோயிலிருந்து நற்சுகம், பொல்லாத நோய்களின் சொல்லொணா தொல்லைகளிலிருந்து விடுதலை, மன அமைதியைக் கெடுத்து குடும்பத்தை இருகூறாக்கும் மனநோயிலிருந்து மகிழ்ச்சிகரமான மாற்றம், குடும்பங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் பலவகைப் பிணிகள், பிரச்சினைகளுக்குப் பரிகாரத் தீர்வு ஆகிய புதுமைகள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன.

    தூய மிக்கேல் அதிதூதரின் அருள்நாடி குமரிமாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் பக்தர்கள் தினமும் இராஜாவூர் வந்து, செல்கின்றனர். இத்திருத்தலத்தில் சிறப்புற்றுத் திகழும் தூய மிக்கேல் அதிதூதர் குருசடியில் பலவகை நோயாளிகள் தங்கள் பிணிகள் நீங்கி நலம் பெற நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கின்றனர்.

    சனிக்கிழமைதோறும் மாலை 5 மணிக்கு நடைபெறும் நவநாள் திருப்பலியிலும், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நவநாள் மற்றும் சிறப்பு நற்கருணை ஆசிர்வாதத்திலும், 11 மணிக்கு தூய மிக்கேல் அதிதூதர் குருசடியில் திருப்பயணிகளால் நடத்தப்படும் சிறப்பு செப வழிபாட்டிலும் கலந்துகொள்ள பல ஊர்களிலிருந்தும் மக்கள் விழாக் கூட்டமெனத்திரண்டு வந்து, நன்மைகள் பெற்றுச் செல்கின்றனர். சனிக்கிழமைகளில் சிறப்பு பஸ்களும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் இத்திருத்தலத்தின் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவில் எண்ணற்ற மக்கள் கலந்துகொண்டு உடல், உள்ள நலம்பெற்றுச் செல்கின்றனர். அனைத்துச் சமயங்களின் சங்கமாக நம்பிக்கையில் அணிதிரளும் பக்தர்கள் அடைகின்ற அற்புதங்கள் ஆச்சரியத்துக்குரியவையாகும்.

    அன்றியும் நோயுற்றோரைப் பராமரிக்க மனநோயாளிகளுக்குச் சிறப்பு மனநல மருத்துவ உதவி முதலியவையும் இத்திருத்தலத்தில் அமைந்துள்ளன. ஏழைகள் மற்றும் நோயாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. பங்கின் வளர்ச்சிக்காக பங்கு அருட்பணிப்பேரவை, பங்கு நிதிக்குழு, 21 அன்பியங்கள், பல்வேறு பக்த சபைகள் மற்றும் இயக்கங்கள் பணியாற்றி வருகின்றன. இத்திருத்தலத்திற்கு நீங்களும் வந்து இறையாசீர் பெற்றுச் செல்ல உங்களை அன்புடன் அழைக்கிறோம். இறை ஆசீர் உங்களுடன் இருப்பதாக!

    பங்குத்தந்தை, பங்குப் பேரவை மற்றும் பங்கு இறைமக்கள்.
    விண்ணுலகில் நவ விலாச வான் தூதர்களின் தலைவர் புனித மிக்கேல். இவரது வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    விண்ணுலகில் நவ விலாச வான் தூதர்களின் தலைவர் புனித மிக்கேல். உலகம் படைக்கப்படும் முன்னர் தூதர்களின் விடிவெள்ளி என அழைக்கப்பட்டவன் லூசிபர். உலகிற்கு மீட்பர் தேவை மீட்பது தன் மைந்தன் என இறைவன் திருவுளமானார் அதிதூதராக தான் இருக்க. மனுவுரு எடுக்கும் மீட்பரை அராதிக்கமட்டேன் என்ற இறுமாப்பு லூசிபரில் எழுந்தது. அகங்காரம் கொண்டான் ஆணவத்தால் தேவனையே எதிர்த்தான். நல்வழி காட்ட மிக்கேல் அதிதூதர் விரைந்தார். அவரின் நல்லுரைகளை உதறித்தள்ளினான் லூசிபர்.

    "பரத்தில் பணிவதை விட நரகில் ஆட்சிபுரிவதே மேல் " என்றான்.

    இறைவனுக்கு நிகரானவன் யார்? என வீரமுழக்கமிட்டு போராடி லூசிபரையும் அவன் சகாக்களையும் எரிநரகில் வீழ்த்தினார் மிக்கேல் அதிதூதர். மிக்கேல் என்பதின் பொருள், இறைவனுக்கு நிகரானவன் யார் என்பதே.

    "வைகறைப் புதல்வனே, விடிவெள்ளியே, வானினின்று நீ வீழ்த்த வகைதான் என்னே!"(இசையாஸ் 14/12)

    "உன்னதருக்கு ஒப்பாக என்னை ஆக்கிக்கொள்வேன் என்று நீ உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய். ஆயினும் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய் படுகுழியின் ஆழத்தில் வீழ்த்தப்பட்டாய்.(இசையாஸ் 14/14,15)

    "பின்பு ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும், ஒரு பெரிய சங்கிலியையும் தன் கையில் பிடித்துக்கொண்டு, வானத்திலிருந்து இறங்கி வரக்கண்டேன், சாத்தானென்று சொல்லப்பட்ட ஆதிசர்ப்பமகிய பறவை நாகத்தை அவர் பிடித்து ஆயிரம் வருடமளவாக அவர் கட்டி வைத்து அது ஜனங்களை மோசம் போகாதபடிக்கு, அதை பாதாளத்தில் தள்ளியடைத்து, அதன் மேல் முத்திரையிட்டார்" (காட்சியாகமம் 20/1மூ 3)

    இங்கு ஆயிரம் வருடங்கள் என்பது அனேக யுகங்களைக் குறிக்கும், இவ்வாறு குறிப்பிடப்பட்ட தேவன் தூய மிக்கேலே

    காட்சியாகமம் 12/7 முதல் 9 வரை உள்ள வசனங்கள் வருமாறு :-

    "அன்றியும் வானத்திலே ஒரு பெரிய யுத்தம் உண்டாயிற்று. மிக்கேலும் அவர் தூதர்களும் பறவை நாகத்தோடு யுத்தம் செய்தார்கள். பறவை நாகமும் அவனுடைய தூதர்களும் யுத்தம் செய்தார்கள் அவர்கள் ஜெயங்கோள்ளவும் இல்லை. வானத்திலே அவர்கள் இருந்த இடம் அது முதல் காணப்படவுமில்லை. அப்படியே ஆதி சர்ப்பமாகிய அந்தப் பெரிய பறவை நாகம் வெளியே தள்ளப்பட்டது. அதற்கு பேய் என்றும் சாத்தான் என்றும் பெயர். அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது. அதன் தூதர்களும் தள்ளப்பட்டார்கள்."

    இதனால்தான் தூய மிக்கேல் அதிதூதரின் சொரூபத்தில், அவர் பாதத்தின் கீழ் பசாசு மிதிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பசாசுக்கு அதிதூதர் மிக்கேல் என்றாலே நடுக்கம். அவரிடம் போரிட்டு வெற்றி கொள்ள அதனால் இயலாது அதிதூதர் மிக்கேல் வல்லமை மிக்கவர். ஆயினும் தாழ்ச்சியுடயவர். அவர் சமாதான தூதன்.

    மரண வேளையில் நம்முடனிருந்து பசாசுக்களை ஓட்டுபவர். உலகமுடிவில் எக்காளம் ஊதும் அதிதூதர், அவர் எனக் கருதப்படுகிறது இதனை:-

    "அக்காலத்தில் உன் இனத்தாருக்குக் காவலாக சேனைத் தலைவரான மிக்கேல் எழுப்புவார், மக்களினம் தோன்றியதுமுதல் அக்காலம்வரை இருந்திராத துன்ப காலம் வரும்."

    "யார் யார் பெயர் நூலில் எழுதப்பட்டுள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்ணில் உறங்குகிற பலருள் சிலர் முடிவில்லா வாழ்வடைவதற்கும் , சிலர் முடிவில்லா இழிவுக்கும், நிந்தைக்கும் ஆளாவதற்கும் எழுந்திருப்பார்கள்" (தானியேல் 12/1,2) என்ற வேதப்பகுதி உறுதிப்படுத்துகிறது.

    13-ம் சிங்கராயர் பாப்பிறை ஒரு தினம் திருப்பலி நிறைவேற்றி முடித்தவுடன் மூர்ச்சையானார், யாவரும் அவர் இறந்துவிட்டார் என எண்ணினர் வெகு நேரத்திற்குப்பின் அவர் சுயநினைவு பெற்றார். திருச்சபையின் மீது சாத்தானால் வர இருக்கும் தீதுகளை அவர் காட்சியாகக் கண்டு நடுங்கி விட்டார். தூய மிக்கேல் அதிதூதர் விரைந்துவந்து சாத்தானுடன் போர் செய்து, அதனையும் தோழர்களையும் நரகத்தில் தள்ளியதையும் அக்காட்சியில் அவர் கண்டார். உடனே தூய பிதா அவர் மீது ஒரு ஜெபத்தை எழுதி உலகமெங்கும் அது செய்யப்படவேண்டுமென ஆணையிட்டார்.

    திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே அவர் திருச்சபையின் காவற்தூதராகவே போற்றப்பட்டார். ஆயினும் 5-ம் நூற்றாண்டில்தான் அவர் திருநாள் செப்டம்பர் 29-ம் நாள் கொண்டாடப்படவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதிலிருந்தே மைக்கேல் மாஸ் விடுமுறை தோன்றியது.

    திருநாள் கொண்டாடிட நடந்த நிகழ்ச்சி சுவையானது.

    கி.பி.404-ல் தூயமிக்கேல் காட்சி தந்ததால் சிபான்றோ என்ற இடத்தில் உள்ள குகையொன்று சிறப்பு பெற்றது. சிபான்றோ மக்கள் மீது அண்டை நாட்டார் படையெடுத்திட முயற்சிகள் செய்தவண்ணம் இருந்தனர். பக்தியுள்ள ஆயர் தங்களை காத்திட அதிதூதர் தூயமிக்கேலிடம் மன்றாட மக்களைக் கேட்டுக்கொண்டார்.

    போருக்கு முந்தின இரவு அதிதூதர் ஆயருக்கு காட்சியளித்து, அடுத்தநாள் பகைவர்கள் தோற்று ஓடிடுவர் என்றார். அடுத்ததினம் யுத்தம் ஆரம்பமானதும் பெரும்புயல் வீசியது. பயங்கர இடியும் மின்னலும் ஏற்பட்டன. மின்னல் அம்புபோல் பாய்ந்து பகைவரை தாக்கின எதிரிகள் எதிர்க்க இயலாது படைக்களம் விட்டு பயந்து ஓட்டம்பிடித்தனர், புறமுதுகு காட்டி ஓடினர். இவ்வெற்றியின் நினைவாக அங்கு இருந்த கெபி ஒரு ஆலயமாக மாற்றியமைக்கபட்டது. பல புதுமைகள் இங்கு நடந்தேறின. திருச்சபையும் அவருக்கு திருநாள் அமைத்தது. செப்டம்பர் 29-ல் அவர் திருநாள் சிறப்பிக்கப்படுகிறது.

    பசாசுகளின் சகல மாய்கையிளிருந்தும் நம்மைக்காப்பவர் தூயமிக்கேல் அதிதூதர் போர் வீரர்களின் பாதுகாவலராகவும் அவர் புகழப்படுகிறார் உலகம் உடல். அலகை என்பனவற்றுடன் நாம் அன்றாடம் நடத்தும் போரில் வெற்றியடைய அவரின் உதவி நமக்குத்தேவை எனவே அவர்மீது பக்தி கொண்டு அவரை வேண்டுவது, சிறந்த பக்தி முயற்சியாகும்

    அதிதூதர் மிக்கேல் வலிமை பொருந்தியவர், திருச்சபைக்குப் பாதுகாவலர், கிறிஸ்தவ நாடுகளுக்கும், ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பாதுகாவலர். அது மட்டுமின்றி, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் உதவியாளரும் புனிதமிக்கேலே! அவர்களைத் தேற்றுபவரும் புனிதமிக்கேலே! மரித்தோருக்கானத் திருப்பலியில்

    தேவரீர் முற்காலத்தில் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியாருக்கும் வாக்களித்த பேரின்ப ஒளிக்கு அவர்களை வெற்றிக்கொடி தாங்கும் தூயமிக்கேல் தூதர் அழைத்துச் செல்வாராக என வேண்டப்படுகிறது.

    நமது துன்ப வேளையில் தவறாது உதவும் நண்பர் தூயமிக்கேல் அதிதூதர். அணுகுவோரை ஆதரிப்பவர் தூயமிக்கேல் அதிதூதர்.

    வேண்டுவோரை வாழவைப்பவர் தூயமிக்கேல் அதிதூதர்.

    நமக்காகவும், நம் மறைக்காகவும் அவரை அனுதினமும் வேண்டிடுவோம்.
    நாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.15 மணிக்கு செபமாலை, திருக்கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. வேதநகர் பங்குதந்தை பெலிக்ஸ் கொடியேற்றி வைக்கிறார். மறை மாவட்ட அன்பிய ஒருங்கிணைய இயக்குனர் வலேரியன் தலைமை தாங்குகிறார். குறும்பனை துணை பங்குதந்தை சகாய கிளாசின் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் செபமாலை, திருப்பலி மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    9-ம் திருவிழாவன்று காலை குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் செபமாலைக்கு கிறிஸ்துநகர் பங்குதந்தை தாமஸ் அருள் ஆனந்த் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் மைக்கேல் பிரான்சிஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    10-ம் திருவிழாவன்று காலை கோட்டார் மறைவட்ட முதன்மை குரு மைக்கேல் ஆஞ்சலுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி முடிவில் நற்கருணை ஆசீர், தொடர்ந்து சிறுசேமிப்பு ஆண்டு விழா, பரிசு வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 
    ×