search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மணலிக்குழிவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    மணலிக்குழிவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    • திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 30-ந்தேதி புனித தேவசகாயம் பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    திக்கணங்கோடு அருகே உள்ள மணலிக்குழிவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை 6.45 மணிக்கு கொடியேற்றம் ஆகியவை நடைபெறும். மாத்திரவிளை புனித ஆரோபன அன்னை ஆலய அருட்பணியாளர் ஜஸ்டின் பிரபு கொடியேற்றி வைக்கிறார். தொடர்ந்து திருப்பலி, அன்பிய ஒருங்கிணைய ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, கூட்டுத்திருப்பலி நடக்கிறது. 25-ந் தேதி காலை 9 மணிக்கு குழந்தைகளுக்கு முதல் திருவிருந்தும், திருமுழுக்கும் வழங்கப்படுகிறது. மாலையில் மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. வருகிற 30-ந்தேதி புனித தேவசகாயம் பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளான வருகிற 2-ந் தேதி காலை 9 மணிக்கு அழகியமண்டபம் அன்னை ஆதா பயிற்சி நிலைய இயக்குனர் அருட்பணியாளர் எஸ். கே .ஜோஸ் ராபின்சன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்கு அருள்பணியாளர் மரிய வின்சென்ட் தலைமையில் பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஓலக்கோடு ஜான், செயலாளர் தீபா, துணை செயலாளர் மிக்கேல் ராஜ், பொருளாளர் விஜிலா, பங்கு அருள்பணி பேரவையினர், பங்கு இறைமக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

    Next Story
    ×