search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா பேராலயம் பிரசித்திபெற்றதாகும். இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா பேராலயம் பிரசித்திபெற்றதாகும். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5ந் தேதி நடக்கிறது. தற்போது 436வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 6 மணிக்கு 2வது திருப்பலியும் நடந்தது. 7.30 மணிக்கு பி‌ஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த கொடி பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் பி‌ஷப் இவோன் அம்புரோஸ் அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்போது மக்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் புறாக்களை பறக்க விட்டனர்.

    மேலும் மக்கள் நேர்ச்சையாக கொண்டு வந்த பால், வாழைப்பழம் ஆகியவற்றை கொடிமரத்தின் அடியில் வைத்து வணங்கினர். சிலர் சிறு குழந்தைகளையும் கொடி மரத்தின் அடியில் வைத்து ஆசி பெற்றனர்.

    கொடியேற்றம் முடிந்தவுடன் நேர்ச்சையாக கொண்டு வந்த பழம், பால் உள்ளிட்ட பொருட்களை மக்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர். மதியம் 12 மணிக்கு பாதிரியார் விக்டர் லோபோ தலைமையில் அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 
    Next Story
    ×