search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
    X

    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

    வாடிப்பட்டியில் உள்ள தென்மாவட்டங்களின் வேளாங்கண்ணி என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, நற்கருணை பிரார்த்தனை நடந்தது.
    வாடிப்பட்டியில் உள்ள தென்மாவட்டங்களின் வேளாங்கண்ணி என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி, நற்கருணை பிரார்த்தனை நடந்தது.

    இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு 2018-ம் ஆண்டிற்கு நன்றி திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள் இறைதுதி பாடல்கள் பாடினர்.

    ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், நிர்வாக தந்தை ஜோசப், நேசக்கரங்கள் காப்பக தந்தை சேசுசத்தியநாதன், தந்தை கிறிஸ்டி ஆகியோர் மறை உரையாற்றினர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல பங்குமக்கள், அன்பு குழுக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
    Next Story
    ×