என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தமிழுக்கு வருவாரா அனுஷ்கா ஷர்மா?
Byமாலை மலர்3 Jun 2019 10:25 AM GMT (Updated: 3 Jun 2019 10:25 AM GMT)
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா ஷர்மாவை கோலிவுட்டிற்கு அழைத்து வர சில இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர்.
பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். படப்பிடிப்பில் பங்கேற்ற ஷ்ரத்தாவுக்கு பிரபாஸ் வகை வகையான விருந்து பரிமாறி அசத்தினார். படம் முடிவடையும் தருவாயில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசு பரவி வருகிறது.
இந்நிலையில் பாலிவுட் வரவான நடிகை அனுஷ்கா ஷர்மாவை கோலிவுட்டிற்கு அழைத்து வர சில இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர். அனுஷ்கா ஷர்மா இந்தியில் தயாரித்து நடித்த, ‘பரி’ திகில் படம் ஹிட்டானது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் அனுஷ்கா ஷர்மாவையே நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனை நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் கோலியை காதலித்து மணந்த அனுஷ்கா சர்மா இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று தகவல் பரவியதால் தற்போது பாலிவுட்டில் அவரது மவுசு குறைந்திருக்கிறது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார் அனுஷ்கா ஷர்மா.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X