என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நான் நடிப்பதை யாராலும் தடுக்க முடியாது - ராதாரவி
Byமாலை மலர்11 April 2019 10:22 AM GMT (Updated: 11 April 2019 10:22 AM GMT)
‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்ற குறும்பட விழாவில் கலந்துக் கொண்ட ராதாரவி, நான் நடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். #RadhaRavi
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் திரைப்பட விழாவில் ராதாரவி கலந்துகொண்டு பேசியது சர்ச்சையானது. நயன்தாரா குறித்து அவரது பேச்சு பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக திமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
இந்தப் பிரச்சினை குறித்து ராதாரவி மீண்டும் பேசியுள்ளார். சென்னையில் ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்ற குறும்படம் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு, ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ராதாரவி பேசும் போது, பயம் என்பது எங்களுடைய குடும்பத்திலேயே கிடையாது. எதற்கு பயப்பட வேண்டும்? சிலர் நடிப்பதை நிறுத்திவிடுவோம் என்கிறார்கள். அது முடியாது, நான் நாடகத்தில் நடித்தால் உங்களால் எப்படி நிறுத்த முடியும்.
நான் சந்தித்தது ஒரு பிரச்சினையே இல்லை. இதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்பதே கிடையாது. ஏனென்றால் இதெல்லாம் தற்காலிகப் பிரச்சினை. இவர் ஒன்றும் தப்பாக சொல்லவில்லையே என்று சிந்திக்கக்கூடிய அளவுக்கு இது என்ன ஐ.நா. சபை பிரச்சினையா? நம்ம பேசினதில் உண்மை இருக்கா இல்லையா. அவ்வளவுதான். உண்மை என்றவன் ஏத்துக்குட்டு போ, இல்லை என்றவன் விட்டுவிடு” என்று பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X