என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நான் யாருடனும் பழகுவது இல்லை - டாப்சி
Byமாலை மலர்3 Sep 2018 10:43 AM GMT (Updated: 3 Sep 2018 10:43 AM GMT)
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்சி, சமீபத்தில் அளித்த பேட்டியில் நான் யாருடனும் அவ்வளவாக பழகுவது இல்லை என்று கூறியிருக்கிறார். #Taapsee
ஆடுகளம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் டாப்சி. தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
டாப்சி அளித்த பேட்டியில், “தனி மனுஷியாக எனக்குத் தோல்வியை கண்டு பயம் இல்லை. படங்களோடு என் வாழ்க்கை முடிந்துவிடுவது இல்லை.
என் தங்கை ஷகுனுடன் சேர்ந்து உணவகம் தொடங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். நேரம் கிடைத்த உடன் அந்தத் திட்டத்தை செயல்படுத்துவேன்.
எதிர்காலத்தில் நான் சினிமாவை விட்டு விலகுவது என்றால் அதனுடன் தொடர்பில்லாத பிற தொழில் என் கைவசம் இருக்க வேண்டும். திரைப்படத்தைத் தாண்டி வாழ்க்கை இருப்பது நல்லது. நான் யாருடனும் அவ்வளவாகப் பழகுவது இல்லை. அதனால் திரையுலகினர் மாறிவிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால் தற்போது எல்லாம் சிறப்பான திரைக்கதைகள் என்னைத் தேடி வருகிறது. வெற்றி அடைந்த பிறகு மக்கள் என்னை மரியாதையுடன் நடத்துகிறார்கள். என் கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். என் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கத் தொடங்கிவிட்டது” என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X