search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகைகளின் ஒப்புதலுடன் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது - நடன இயக்குனர் சரோஜ் கான்
    X

    நடிகைகளின் ஒப்புதலுடன் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது - நடன இயக்குனர் சரோஜ் கான்

    பாலிவுட்டில் நடிகைகளின் ஒப்புதலுடன் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது என்று பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான் கூறியுள்ளார். #SarojKhan
    திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நிகழ்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனை, பல்வேறு நடிகைகள் ஒப்புக்கொண்டு உள்ளன. ஆனால், சினிமாவில் மட்டும் அத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதில்லை, பல்வேறு துறைகளிலும் இதுபோன்ற பாலியல் வற்புறுத்தல்கள் இருப்பதாக சினிமாத்துறையை சார்ந்த பலர் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனராக இருக்கும் சரோஜ்கான், பாலிவுட்டில் நடிகைகளின் ஒப்புதலுடன் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது என்று கூறியிருக்கிறார்.

    மேலும் அவர் அளித்த பேட்டியொன்றில், “பாலியல் தொந்தரவு, வன்கொடுமை என்பது சினிமாவில் மட்டுமில்லை, அரசுத் துறைகளிலும் இருக்கிறது. மற்ற துறைகளை பொருத்தவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, கைவிட்டு விடுவார்கள் என்றும், ஆனால் சினிமாவில் வாய்ப்புக்காக இணங்கிச் சென்றால், வேலைவாய்ப்பாவது கிடைக்குமே... பாலிவுட்டில் நடிகைகளின் ஒப்புதலுடன் தான் அத்தகைய பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று சரோஜ் கான் கூறியுள்ளார்.

    சரோஜ் கான் இவ்வாறு கூறியிருப்பதற்கு நடிகைகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    Next Story
    ×